தெலுங்கானாவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு 309 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கான மாநிலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால், 309 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது. அதிகபட்சமாக நல்கொண்டா மாவட்டத்தில் 90 பேர் இறந்துள்ளனர்.

தெலுங்கான மாநிலத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றன. பகல் நேரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பகல் நேரங்களில் 44 டிகிரி செல்சியஸ்க்கு மேல் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினர்.

 Heat wave kills 310 in Telangana

கடந்த சில வாரங்களாக வாட்டி வதைத்த வெயிலால், பல மாவட்டங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. அதன்படி, சுட்டெரித்த வெயிலின் தாக்கத்திற்கு தெலங்கானா முழுவதும் 309 பேர் பலியானதாக மாநில பேரிடர் மேலாண்மைத்துறை அறிவித்துள்ளது.

இதனை மாநில அரசு அமைத்த மூன்று பேர் கொண்ட குழு உறுதி செய்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் அதிகபட்சமாக நல்கொண்டா மாவட்டத்தில் 90 பேர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

மெகபூபா நகரில் 44 பேரும், கம்மம் பகுதியில் 37 பேரும் வெயிலுக்கு பலியாகியுள்ளதாக அறிவித்துள்ளது.

தெலுங்கானாவில் தற்போது சராசரியாக 44 டிகிரி வெயில் இருந்து வருகிறது. 2015ம் ஆண்டு கோடை காலத்தின் போது கடும் வெயிலுக்கு தெலுங்கானாவில் 486 பேர் உயிரிழந்திருந்தனர் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+