வறுத்து எடுக்கும் வெயிலுக்கு ஆந்திரா, தெலுங்கானாவில் 223 பேர் பலி
ஹைதராபாத்: வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் 223 பேர் பலியாகியுள்ளனர்.
ஓசோன் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டை பெரிதாகிக் கொண்டே போவதால் உலகில் வெயில், பனி மற்றும் மழைக்காலங்கள் உக்கிரமாக உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு வெயில், பனியின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்நிலையில் கடந்த 18ம் தேதியில் இருந்து 23ம் தேதி வரை ஆந்திராவில் வெயிலுக்கு 95 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதியில் இருந்து நேற்று வரை தெலுங்கானாவில் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் 128 பேர் பலியாகியுள்ளனர்.
ஆந்திராவில் வெயிலுக்கு பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்குமாறு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் வெயிலுக்கு மேலும் மக்கள் பலியாகாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் வெயிலுக்கு இதுவரை 335 பேர் பலியாகியுள்ளனர். அதில் 223 பேர் தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications