டெல்லியில் நீடிக்கும் கடும் பனிமூட்டம்: ரயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதி!
டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
டெல்லி: டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதானல் ரயில், விமான மற்றும சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் டெல்லிக்கு வரும் 90 ரயில்கள் தாமாகியுள்ளன.
டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுகிறது.

இதனால் ரயில், விமானம் மற்றும் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் டெல்லிக்கு வரும் 90 ரயில்கள் பனிமூட்டத்தால் தாமதமாகியுள்ளது.
சென்னை - டெல்லி இடையேயான ரயில்கள் பலமணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. டெல்லிக்கு வரும் சர்வதேச விமானங்களும் தாமதமாகியுள்ளன. 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பனிமூட்டத்தால் நிலவும் குளிர் காரணமாக காலை 10 மணி வரையிலும் சாலைகளில் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது. குளிரால் சாலையோரங்களில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications