டெல்லியை தொடர்ந்து.. உத்தரகாண்டில் வெளுத்தெடுத்த மழை.. மொத்தமாக உடைந்த பாலம்.. வீடியோ!
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கடுமையான மழையில் பாலம் ஒன்று அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
வடமாநிங்களில் தற்போது தீவிரமாக மழை பெய்து வருகிறது. அதிலும் டெல்லி, ஹரியானா, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிக கடுமையாக மழை பெய்து வருகிறது.
டெல்லியில் பெய்த கனமழை காரணமாக நகருக்குள் வெள்ளம் வந்தது. நூற்றுக்கணக்கான வீடுகள் இதனால் தண்ணீரில் மூழ்கியது. டெல்லியில் ஐடிஓ பகுதிக்கு அருகே இருக்கும் அண்ணா நகர் பகுதி மொத்தமாக நீரில் முழ்கியது.
டெல்லியை புரட்டிய மழை.. பாலத்திற்கு கீழ் அப்படியே மூழ்கிய பேருந்து.. ஒருவர் பலி.. ஷாக்கிங் வீடியோ!
அங்கு சாலையிலும் பெரிய குழி ஏற்பட்டது. இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கடுமையான மழையில் பாலம் ஒன்று அடித்து செல்லப்பட்டது . அங்கு இருக்கும் மதன்கோட் என்ற இடத்தில் சிறிய பாலம் அடித்துச்செல்லப்பட்டது.
மூன்று ஊர்களை இணைக்கும் பாலம் ஆகும் இது. இது மொத்தமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. பித்தோராகர் முன்சியாரி பகுதிக்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த பாலம் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்படியே வீடியோவாக வெளியாகி உள்ளது.
இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் மழையால் உத்தரகாண்ட் மோசமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.