கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை.. ஒகேனக்கல்லில் அதிகரித்த நீர்வரத்து
பிலிகுண்டு: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முன்னதாக பருவமழை பொய்த்ததால் கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது. கர்நாடகாவில் மழை பெய்தால் மட்டுமே, தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என கர்நாடக மாநில அமைச்சர் ரேவண்ணா சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

கர்நாடகாவில் போதுமான தண்ணீர் இல்லை என்றும், மழை இல்லாததால் அங்கு மழை பெய்து எங்கள் அணைக்கு போதுமான நீர் கிடைத்தால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், இம்மாதம் துவக்கம் முதலே அவப்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 800 கனஅடியாக அதிகரித்துள்ளது.
தற்போது அதிமாக வரக்கூடிய நீரை தமிழக மற்றும் கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் அதிகாரிகள் அளவிட்டு கண்காணித்து வருகின்றனர்.இரு நாட்களுக்கு முன் டெல்லியில் நடைபெற்ற காவிரி ஆணைய ஒழுங்காற்று கூட்டத்தில், ஜூன் மாதத்தில் திறக்க வேண்டிய 9 டிஎம்சி நீரை திறக்க கர்நாடகத்தை தமிழகம் கேட்டுக் கொண்டது
தற்போது கர்நாடகாவின் பல இடங்களிலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று கர்நாடகம் நீரை திறந்து விடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், மெயின் அருவி, சினி ஃபால்ஸ் மற்றும் காவிரியாற்றில் குளித்து மகிழ்ச்சியடைந்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications