குஜராத், மகராஷ்டிரா, கோவா மாநிலங்களில் மீண்டும் கனமழை வெளுக்கும்- வானிலை ஆய்வு மையம் வார்னிங்
அகமதாபாத்: குஜராத், மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் சில பகுதிகளிலும், ஒடிஷா, கிழக்கு ராஜஸ்தான், மேற்கு மத்தியப் பிரதேசம், விதர்பா, கடலோர மற்றும் தெற்கு உள்துறை கர்நாடகா, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் இன்று கனமழை முதல் மிக கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சில இடங்களில், பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும், சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில்) வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது. ஜம்மு, காஷ்மீர், லடாக், கில்கிட்-பால்டிஸ்தான் மற்றும் முசாபராபாத், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், மத்தியப் பிரதேசம் மாநிலங்களிலும் டெல்லி, மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு அரபிக்கடல் மற்றும் குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் கர்நாடகா கடற்கரைகளில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 65 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு-மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடலில் மணிக்கு 50 முதல் 70 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், கிழக்கு-மத்திய அரபிக்கடலில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்காள விரிகுடாவின் மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேச கடற்கரைகள், மத்திய வங்காள விரிகுடா மற்றும் மத்திய வங்காள விரிகுடாவை ஒட்டிய பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, மேற்கு ராஜஸ்தான், கிழக்கு மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், அசாம், மேகாலயா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலும், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், வட உள்பகுதி கர்நாடகா மற்றும் கேரளாவிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications