உயிருக்கு போராடிய குழந்தையை காப்பாற்றாமல் ஹேமமாலினி தவறு செய்துவிட்டார்: அமைச்சர் பாபுல் சுப்ரியோ
டெல்லி: நடிகை ஹேமமாலினி செய்தது தவறு தான். ஆனால் குழந்தையை எதற்காக காரின் முன்சீட்டில் அமர வைத்தனர் என்று மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் தவ்சாவில் நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினியின் பென்ஸ் காரும், மாருதி ஆல்டோ காரும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆல்டோ காரில் இருந்த சோனம் என்கிற 4 வயது சிறுமி பலியானார். ஹேமமாலினிக்கு காயம் ஏற்பட்டது.

குழந்தையின் தந்தை போக்குவரத்து விதிகளை மீறியதால் விபத்து நடந்ததாக ஹேமமாலினி தெரிவித்துள்ளார். அதற்கு குழந்தையின் தந்தை ஹனுமன் கூறுகையில், நான் எந்த விதியையும் மீறவில்லை. ஹேமமாலினி மட்டும் அவருடன் சேர்த்து என் குழந்தையையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தால் அவள் இறந்திருக்க மாட்டாள் என்றார்.
இந்நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சம்பவ இடத்தில் இருந்த ஹேமாஜி உள்பட அனைவர் மீதும் தப்பு உள்ளது. ஹேமாஜி அந்த குழந்தையை சாலையில் உயிருக்கு போராட விட்டுவிட்டு சென்றிருக்கக் கூடாது. இது பெரிய தவறு தான். அதை நாம் ஒப்புக் கொள்வோம். ஆனால் குழந்தையின் தாய் அவரை முன்சீட்டில் தனது மடியில் அமர வைத்து ரிஸ்க் எடுத்துள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications