துர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்! 'ஹைஅலர்ட்' பிறப்பிப்பு
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் துர்க்கா பூஜையை சீர்குலைக்க பாகிஸ்தான் சதி செய்துள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து மேற்கு வங்கத்தில் ஹை அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மியான்மரை சேர்ந்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை சட்ட விரோத குடியேறிகள் என கூறி அவர்களை தாய் நாட்டுக்கே திருப்பியனுப்பும் வேலைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் இறங்கியுள்ளது.

ரோஹிங்யா அகதிகள் மேற்கு வங்கத்தில் அதிகம் உள்ளனர். இதை சாதகமாக்கிக்கொண்டு, தீவிரவாத செயல்களை அம்மாநிலத்தில் அரங்கேற்ற பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் நவராத்தியின்போது நடைபெறும் துர்கா பூஜை வெகு பிரசித்தி. எனவே, இந்த நேரத்தில் இந்துக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி, இந்து-முஸ்லிம் பிரச்சினையை உருவாக்க பாகிஸ்தான் உளவுத்துறை திட்டமிட்டுள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் சமீபத்தில் இதுகுறித்த ஆலோசனை நடைபெற்றுள்ளதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கு முன்பாக இந்தியாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு முன்பாக, டெல்லியிலுள்ள பாக். தூதரகம், கொழும்புவிலுள்ள தனது தூதரகங்களில் பாகிஸ்தான் சதி திட்டம் தீட்டியிருந்தது. இப்போது டாக்காவில் அந்த வேலையை பாகிஸ்தான் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
[நேதாஜி இன்னும் உயிரோடு இருக்கிறாரா? விளக்கம் அளிக்க மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு]
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து குண்டு வெடிப்புகளை நிகழ்த்துவது பாகிஸ்தான் நோக்கம். இதற்காக ஜமாத்-உல்-முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பை பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்களாம். இதையடுத்து மேற்கு வங்கத்தில் அனைத்து காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications