பீகார் மாநிலத்துக்குள் ஊடுருவிய 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள்.. புகைப்படங்களை வெளியிட்டு தேடுதல் வேட்டை
பாட்னா: பாகிஸ்தானில் இருந்து பீகார் மாநிலத்துக்குள் 3 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை அதிர்ச்சி தகவல் வௌியிட்டுள்ளது. அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பீகாரில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பீகார் முழுவதும் வாகன பேரணி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேபாளம் வழியாக பீகாருக்குள் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 3 பேர் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானின் ராவல் பிண்டியை சேர்ந்த ஹூசைன், உமர்கோட்டை சேர்ந்த அடில், பகவல்பூரை சேர்ந்த உஸ்மான் ஆகியோர் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பீகாருக்குள் ஊடுருவி உள்ளனர். அவர்கள் நாச வேலைகளில் ஈடுபட திட்டமிட்டு உள்ளனர் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.
உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் 3 தீவிரவாதிகளின் புகைப்படங்களை பீகார் காவல்துறை வெளியிட்டுள்ளது. அவர்களை கண்டுபிடிக்க மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது. நேபாள குடியுரிமை அல்லது இந்திய குடியுரிமை ஆதாரங்களை போலியாக உருவாக்கி 3 தீவிரவாதிகளும் பீகார் மாநிலத்துக்குள் நுழைந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தற்போது பீகாரில் வாகன பேரணி நடத்தி வருகிறார். அவர் திறந்தவெளி வாகனத்தில் பேரணி மேற்கொண்டு வருகிறார். தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக ராகுல் காந்தியின் பயண திட்டங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications