டுபாக்கூர் சாமியார் ராம்பாலை இன்னமும் கைது செய்யலையா? ஹரியானா போலீஸ் மீது கோர்ட் காட்டம்!
பர்வாலா: கொலை வழக்கில் சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பாலை கைது செய்யாததற்கு ஹரியானா போலீசாசாரை பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. சாமியார் ராம்பாலை வரும் வெள்ளிக்கிழமைக்குள் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
2006ஆம் ஆண்டு கொலை வழக்கில் சாமியார் ராம்பால் ஜாமீனில் வெளியே உள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணை ஜூலை 15-ந் தேதி ஹிசார் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ராம்பால் ஆதரவாளர்கள் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டனர்.

இதனை நீதிமன்ற அவமதிப்பாக வழக்காக பஞ்சாப்- ஹரியானா நீதிமன்றம் பதிவு செய்து ராம்பால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. ஆனால் ராம்பால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டையும் பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றம் பிறப்பித்தது. ஆனாலும் ராம்பால் தரப்பு இறங்கி வருவதாக இல்லை.
போலீசார் அவரை கைது செய்துவிடாதபடி ஆதரவாளர்கள் ஆசிரமத்தில் குவிந்துள்ளனர். இந்த நிலையில் இன்றும் இந்த வழக்கை பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது இன்னமும் ஏன் ராம்பாலை ஹரியானா மாநில போலீசார் கைது செய்யவில்லை என்று காட்டம் காட்டினர் நீதிபதிகள்.
ராம்பாலை வரும் வெள்ளிக்கிழமைக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டதுடன் கொலை வழக்கில் ராம்பாலின் ஜாமீனை ஏன் ரத்து செய்யக் கூடாது என்ற நோட்டீஸையும் நீதிபதிகள் அனுப்பி வைத்துள்ளனர்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications