இமாச்சல பிரதேசம்: வரிந்து கட்டும் அதிருப்தி வேட்பாளர்களால் தலையிலடித்துக் கொள்ளும் பாஜக, காங்கிரஸ்!
சிம்லா: இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் அதிருப்தி வேட்பாளர்கள் அதிகரித்துள்ளதால் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளின் தலைவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
இமாச்சல பிரதேச சட்டசபைக்கு நவம்பர் 12-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இமாச்சல பிரதேசத்தில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. ஆனால் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் வரலாற்றில் எந்த கட்சியும் மீண்டும் ஆட்சியை அமைத்தது கிடையாது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் களத்தில் உள்ளதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் அதிருப்தி வேட்பாளர்கள் விவகாரம் பெரும் தலையிடியாக உருவெடுத்துள்ளது. பாஜகவைப் பொறுத்தவரை சிட்டிங் எம்.எல்.ஏக்கள் 11 பேருக்கு சீட் தரவில்லை. இவர்கள் அனைவருமே இப்போது அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளனர். அதிருப்தி வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கலும் செய்துள்ளனர். இதே நிலைமைதான் காங்கிரசிலும் உள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று கடைசி நாள். இதனால் அதிருப்தி வேட்பாளர்ளின் வேட்பு மனுக்களை வாபஸ் பெற வைப்பதில் இரு கட்சி மேலிடமும் மும்முரமாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் அதிருப்தியாளர்களிடம் இருந்து க்ரீன் சிக்னல் வரவில்லை.
பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா, இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர். அவரது சொந்த மாநிலத்திலேயே உட்கட்சி மோதலுக்கு தீர்வு காண முடியாது இருப்பது பாஜக சீனியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருந்த போதும் பிரதமர் மோடியின் செல்வாக்கு, பிரதமர் மோடி தொடங்கி வைத்த அடிக்கல் நாட்டிய நலத் திட்டங்கள் தங்களுக்கு கை கொடுத்துவிடும் என நம்பிக்கையுடன் களத்தில் நிற்கிறதாம் பாஜக.
-
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
ராம ஸ்ரீனிவாசனை கடைசி நேரத்தில் கைவிட்ட நயினார்.. பிரச்சாரத்திற்கு வராமல் எஸ்கேப்பான பாஜக தலைமை! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு











Click it and Unblock the Notifications