ரூ.210 கோடிக்கு வந்த மின்கட்டணம்! பார்த்ததுமே தலைசுற்றிப்போன தொழிலதிபர்.. மறக்கவே முடியாத சம்பவம்
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் மின்கட்டணத்துக்கான பில் ரூ.210 கோடிக்கு வந்ததால் தொழிலதிபர் அதிர்ந்து போனார். இதுபற்றி புகாரளித்ததற்கு மின்வாரியம் என்ன சொன்னது? என்பது பற்றிய விபரம் வருமாறு:
பொதுவாக வீடு, கடைகளுக்கு மின்கட்டணம் என்பது நாம் பயன்படுத்திய மின்சாரத்துக்கு ஏற்ப வரும். சில நேரங்களில் தவறுதலாக மின்கட்டணம் என்பது அதிகமாக வரும். இதுபற்றி நாம் பலமுறை கேள்வி பட்டு இருப்போம். வீட்டில் ஒரேயொரு பல்பு பயன்படுத்தும் நபருக்கு லட்சக்கணக்கில் மின்கட்டணம் வந்தது என்ற செய்தியை கூட நாம் படித்து இருப்போம்.

ஆனால் இப்போது தொழிலதிபர் ஒருவருக்கு ரூ.210 கோடிக்கு மின்கட்டணம் வந்துள்ளது. இந்த சம்பவம் எங்கு நடந்தது? அதன் பின்னணி என்ன? என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இமாச்சல பிரதேச மாநிலம் ஹமீர்பூர் பகுதியை சேர்ந்த லிலித் தீமன். தொழிலதிபரான இவர் கான்கிரீட் பிசினஸ் செய்து வருகிறார். இவரது வீட்டுக்கு மின்கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டது. அப்போது ரூ.210 கோடிக்கு பில் வந்தது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் ரூ.210 கோடியே 42 லட்சத்து 8 ஆயிரத்து 405க்கு மின்கட்டண பில் வந்தது.
இதுபற்றி அறிந்தவுடன் லலித் தீமன் கடும் அதிர்ச்சியடைந்தார். மின்கட்டணத்துக்கு ரூ.210 கோடியா? அவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்தியதே இல்லையே? என்று உடனடியாக அவர் மின்வாரியத்திடம் சென்று புகாரளித்தார். அவரது புகாரை பெற்ற மின்வாரியம் உடனடியாக பரிசோதனை செய்தது. அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவருக்கு அவ்வளவு தொகை வந்திருப்பதாக கூறியது.
இதையடுத்து அந்த மின்வாரிய அதிகாரிகள் அவருக்கான கட்டணத்தை குறைத்தார். லிலித் தீமன் வீட்டில் பயன்படுத்திய மின்சாரத்துக்கான உண்மைதொகையான ரூ.4,047 மட்டும் வசூலிக்கப்பட்டது. இருப்பினும் லலித் தீமன் வீட்டுக்கு ரூ.210 கோடிக்கு வந்த பில் இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் மின்வாரியத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கிடையே தான் சம்பவம் பற்றி விசாரித்த மின்வாரியம் ஹமிர்பூர் மண்டல சூப்பிரண்ட் இன்ஜினியருக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பி உள்ளது.
இதுபற்றி மின்வாரிய அதிகாரி ஆஷிஸ் கபூர் கூறுகையில், ‛‛மீட்டர் ரீடிங்கில் இருந்து எடுக்கப்பட்ட அளவு சிஸ்டமில் தவறாக குறிப்பிடப்பட்டு இருக்கலாம். இல்லாவிட்டால் சாப்ட்வேர் பிரச்சனையால் தவறான பில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தற்போது பிரச்சனை சரிசெய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், ஊழியர்கள் மீது தவறு இருப்பின் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
-
ரூ.20,000 கோடி ஸ்மார்ட் மீட்டர் திட்டம் ரத்து? தவெக அரசு திட்டம்? தமிழ்நாடு மின் வாரிய அதிர்ச்சி! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications