ரூ.210 கோடிக்கு வந்த மின்கட்டணம்! பார்த்ததுமே தலைசுற்றிப்போன தொழிலதிபர்.. மறக்கவே முடியாத சம்பவம்
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் மின்கட்டணத்துக்கான பில் ரூ.210 கோடிக்கு வந்ததால் தொழிலதிபர் அதிர்ந்து போனார். இதுபற்றி புகாரளித்ததற்கு மின்வாரியம் என்ன சொன்னது? என்பது பற்றிய விபரம் வருமாறு:
பொதுவாக வீடு, கடைகளுக்கு மின்கட்டணம் என்பது நாம் பயன்படுத்திய மின்சாரத்துக்கு ஏற்ப வரும். சில நேரங்களில் தவறுதலாக மின்கட்டணம் என்பது அதிகமாக வரும். இதுபற்றி நாம் பலமுறை கேள்வி பட்டு இருப்போம். வீட்டில் ஒரேயொரு பல்பு பயன்படுத்தும் நபருக்கு லட்சக்கணக்கில் மின்கட்டணம் வந்தது என்ற செய்தியை கூட நாம் படித்து இருப்போம்.

ஆனால் இப்போது தொழிலதிபர் ஒருவருக்கு ரூ.210 கோடிக்கு மின்கட்டணம் வந்துள்ளது. இந்த சம்பவம் எங்கு நடந்தது? அதன் பின்னணி என்ன? என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இமாச்சல பிரதேச மாநிலம் ஹமீர்பூர் பகுதியை சேர்ந்த லிலித் தீமன். தொழிலதிபரான இவர் கான்கிரீட் பிசினஸ் செய்து வருகிறார். இவரது வீட்டுக்கு மின்கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டது. அப்போது ரூ.210 கோடிக்கு பில் வந்தது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் ரூ.210 கோடியே 42 லட்சத்து 8 ஆயிரத்து 405க்கு மின்கட்டண பில் வந்தது.
இதுபற்றி அறிந்தவுடன் லலித் தீமன் கடும் அதிர்ச்சியடைந்தார். மின்கட்டணத்துக்கு ரூ.210 கோடியா? அவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்தியதே இல்லையே? என்று உடனடியாக அவர் மின்வாரியத்திடம் சென்று புகாரளித்தார். அவரது புகாரை பெற்ற மின்வாரியம் உடனடியாக பரிசோதனை செய்தது. அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவருக்கு அவ்வளவு தொகை வந்திருப்பதாக கூறியது.
இதையடுத்து அந்த மின்வாரிய அதிகாரிகள் அவருக்கான கட்டணத்தை குறைத்தார். லிலித் தீமன் வீட்டில் பயன்படுத்திய மின்சாரத்துக்கான உண்மைதொகையான ரூ.4,047 மட்டும் வசூலிக்கப்பட்டது. இருப்பினும் லலித் தீமன் வீட்டுக்கு ரூ.210 கோடிக்கு வந்த பில் இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் மின்வாரியத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கிடையே தான் சம்பவம் பற்றி விசாரித்த மின்வாரியம் ஹமிர்பூர் மண்டல சூப்பிரண்ட் இன்ஜினியருக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பி உள்ளது.
இதுபற்றி மின்வாரிய அதிகாரி ஆஷிஸ் கபூர் கூறுகையில், ‛‛மீட்டர் ரீடிங்கில் இருந்து எடுக்கப்பட்ட அளவு சிஸ்டமில் தவறாக குறிப்பிடப்பட்டு இருக்கலாம். இல்லாவிட்டால் சாப்ட்வேர் பிரச்சனையால் தவறான பில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தற்போது பிரச்சனை சரிசெய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், ஊழியர்கள் மீது தவறு இருப்பின் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications