ஒரு இந்துவை கொலை செய்தால் நாம் 100 பேரை... :இப்படி பேசியதும் பாஜக எம்.பி.தான்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஒரு இந்து பெண்ணை மதம் மாற்றினால் 100 முஸ்லிம் பெண்களை மதம் மாற்ற வேண்டும் என்று பேசிய பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் மற்றொரு சர்ச்சையிலும் சிக்கி இருக்கிறார்.
பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் 2009 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் பேசிய பேச்சுகளின் வீடியோக்கள் இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இதில் ஒன்றுதான், ஒரு இந்து பெணை முஸ்லிமக மதம் மாற்றினால் 100 முஸ்லிம் பெண்களை இந்துவாக மதம் மாற்ற வேண்டும் என்பது.
அத்துடன் அதே கூட்டத்தில் மற்றொரு விஷம கருத்தையும் யோகி ஆதித்யநாத் பேசியிருக்கிறார். "அவர்கள் ஒரு இந்துவை கொலை செய்தால். நாம் 100 பேரை" என்று யோகி ஆதித்யநாத் பேசி முடிக்க கூட்டத்தினர் "கொலைசெய்வோம்" என்று உரக்க வெறிக்கூச்சலிடுகின்றனர்.
இந்த கொலைவெறித் தூண்டல் பேச்சும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications