25 அடி ஆழ சியாச்சின் பனியில்.. இப்படித்தான் 6 நாட்கள் தாக்குப் பிடித்தார் வீரர் ஹனுமந்தப்பா
டெல்லி: சியாச்சின் போர் முனையில் 25 அடி ஆழத்தில் பனியில் சிக்கி 6 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட வீரர் ஹனுமந்தப்பா எப்படி அத்தனை நாட்கள் தாக்குப்பிடித்திருப்பார் என்பது தெரிய வந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உலகின் மிக உயரமான போர் முனையான சியாச்சினில் கடந்த வாரம் புதன்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் மெட்ராஸ் ரெஜிமென்ட்டைச் சேர்ந்த 4 தமிழர்கள் உள்பட 10 பேர் சிக்கினர். அதில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வீரர் ஹனுமந்தப்பா 6 நாட்களுக்குப் பின்னர் 25 அடி ஆழ பனியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார்.
டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

பிரார்த்தனை
ஹனுமந்தப்பா உடல் நலம் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று அவரது குடும்பத்தார் மட்டும் அல்ல நாட்டு மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மோடி, ராணுவ தளபதி தல்பிர் சிங் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று ஹனுமந்தப்பாவை பார்த்துள்ளனர்.

ஹனுமந்தப்பா
மற்ற 9 வீரர்கள் இறந்துவிட்டபோது ஹனுமந்தப்பா மட்டும் எப்படி 6 நாட்கள் பனியில் இருந்தார் என்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. பனிச்சரிவு ஏற்பட்டால் சரியும் பனியுடன் நீந்துமாறு ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹனுமந்தப்பாவோ 25 அடி ஆழத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

குழந்தை போன்று
பனிச்சரிவில் நீந்த முடியாமல் சிக்கிக் கொண்டால் உதவி கிடைக்கும் வரை கருவில் இருக்கும் குழந்தை போன்று கை, கால்களை மடக்கி மூச்சு விட வசதியாக வாயின் அருகே லேசாக ஏர் பாக்கெட்டை தோண்டி வைக்குமாறு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஹனுமந்தப்பா விஷயத்தில் அவர் புதையுண்ட இடத்தில் இயற்கையாகவே ஏர் பாக்கெட் இருந்துள்ளது.

சிறுதுவாரம் வழியாக...
அதாவது அந்த ஆழத்திலும் சிறு துவாரம் இருந்து அது வழியாக காற்று வந்துள்ளது. அதனால் தான் ஹனுமந்தப்பாவால் 6 நாட்கள் உயிருடன் இருக்க முடிந்தது என்கின்றன மருத்துவமனை வட்டாரங்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications