தன்னை பற்றி படம் எடுக்க தயாரிப்பாளரிடம் டோணி எவ்வளவு வாங்கினார் தெரியுமா?
மும்பை: கேப்டன் டோணி தன் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க தயாரிப்பாளர்களிடம் ரூ.60 கோடி கேட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எம்.எஸ். டோணி: தி அன்லோட் ஸ்டோரி என்ற பெயரில் இந்தியில் படம் எடுக்கப்பட்டுள்ளது. நீரஜ் பாண்டே இயக்கியுள்ள படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட் டோணியாக நடித்துள்ளார்.

படத்தின் டிரெய்லரே இணையதளங்களில் சும்மா அதிர்ந்தது. இதனால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் தன்னை பற்றி படம் எடுக்க தயாரிப்பாளர்களிடம் டோணி எவ்வளவு பணம் கேட்டார் என்ற விபரம் தெரிய வந்துள்ளது.
தன்னை பற்றி படம் எடுக்க டோணி ரூ.60 கோடி கேட்டார் என்று செய்தி வெளியாகியுள்ளது. படம் எடுக்க அனுமதி அளித்த உடனேயே அந்த ரூ.60 கோடியில் ரூ.20 கோடியை வாங்கிவிட்டாராம்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறாத ஒருவரின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாக உள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications