ரூ.1.4 கோடி போலி வைரத்தால் பிரேக்-அப் ஆன காதல்.. தொழிலதிபர் வாழ்க்கையில் விளையாடிய நீரவ் மோடி!
நீரவ் மோடிக்கு சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தில் விற்கப்பட்ட நகைகளில் பல போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: கனடாவை சேர்ந்த பால் அல்போன்சா என்ற தொழிலதிபர் 1.4 கோடி ரூபாய்க்கு நீரவ் மோடியிடம் வாங்கிய வைரம் போலியானது என்று தெரிய வந்துள்ளது. இதனால் அவரது காதல் முறிந்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இவர் நிறுவனத்திற்கு உலகம் முழுக்க பெரிய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
பிரபலங்கள் எல்லோரும் இவர் நிறுவனத்தில்தான் வாடிக்கையாளராக இருக்கிறார்கள். இவர் தற்போது தலைமறைவாக உள்ளார்.

எல்லாம் பொய்
ஏற்கனவே நீரவ் மோடிக்கு சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தில் விற்கப்பட்ட நகைகளில் பல போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் நிறைய வைர நகைகளில் கலப்படம் செய்து இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து இருக்கிறது. இந்த புகார் வந்த சில நாட்களிலேயே, முக்கியமான கஷ்டமர்களை நீரவ் மோடியின் கீதாஞ்சலி நிறுவனம் இழந்துவிட்டது.

வைரம் வாங்கினார்
இந்த நிலையில் கனடாவை சேர்ந்த பால் அல்போன்சா, கடந்த 2013ல் நீரவ் மோடியிடம் வைரம் வாங்கியுள்ளார். இந்த வைரத்தின் மதிப்பு 1.4 கோடி ரூபாய். ''3.2 கேரட் ரவுண்ட் பிரில்லியண்ட் டயமண்ட் கட், டி கலர், விவிஎஸ்1'' ரக மிக உயர்ந்து மதிப்பு கொண்ட வைரம் ஆகும் இது. தன்னுடைய காதலிக்கு பரிசாக இதை அளித்துள்ளார்.

சந்தேகம் வந்தது
இந்த நிலையில் தனது காதலியுடனான நிச்சயத்தின் போது, இந்த 1.4 கோடி ரூபாய் மோதிரத்தை அல்போன்சா தன்னுடைய காதலிக்கு அணிவித்துள்ளார். ஆனால் சென்ற வருடம் இந்த வைரம் மீது இருவருக்கும் சந்தேகம் வந்துள்ளது. கொஞ்சம் நிறமும் மங்கியதன் காரணத்தால் சந்தேகம் வந்துள்ளது.

வைரம் போலி
இதையடுத்து இந்த வைரத்தை சோதனை செய்து இருக்கிறார்கள். அதன்பின்பே அந்த வைரம் போலி என்று தெரிந்துள்ளது. இதை அவர்களால் நம்ப முடியவில்லை. அதற்குள் சில நாட்களில் நீரவ் மோடி தலைமறைவாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிந்தனர்
இந்த வைரத்தை வாங்கி ஏமாந்ததன் காரணத்தால் அல்போன்சாவிற்கும் அவரது காதலிக்கும் சண்டை வந்துள்ளது. இந்த சண்டை காரணமாக இருவரும் சில நாட்கள் பேசாமல் இருந்துள்ளனர். இதன் காரணமாக சில நாட்களிலேயே இவர்கள் பிரிந்துவிட்டதாக அல்போன்சா தெரிவித்துள்ளார். இதை குறித்து கனடா பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்து புலம்பி உள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications