ஹூட் ஹூட் புயல் நாளை கரையைக் கடக்கிறது! ஆந்திரா, ஒடிஷாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!!
புவனேஸ்வர்/ஹைதராபாத்: வங்கக் கடலில் உருவாகியுள்ள "ஹூட் ஹூட்' புயல் நாளை ஒடிஷா மற்றும் ஆந்திரா இடையே கரையைக் கடக்க இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத், தாழ்வு மண்டலம் "ஹூட் ஹூட்' புயலாக மாறி இப்போது அதிதீவிர புயலாக வலுவடைந்துள்ளது. இந்த புயல் ஆந்திரக் கடற்கரையில் விசாகப்பட்டினம் மற்றும் ஒடிஷாவின் கோபால்பூர் இடையே நாளை கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிஸா மாநிலம் கோபால்பூரில் இருந்து தெற்கு தென்கிழக்காகவும் விசாகபட்டினத்துக்கு கிழக்கு-தென்கிழக்காகவும் 500 கி.மீ. தொலைவில் இந்த புயல் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் காரணமாக ஆந்திரம், தெற்கு ஒடிஸா பகுதிகளுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனால் புயல் தாக்கும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். ஒடிஷா முதல்வர் நவீன்பட்நாயக், ராணுவத்தின் உதவியையும் கோரி உள்ளார்.
தமிழகத்தைப் பொருத்தவரை அடுத்த இரு நாட்களுக்கு வட கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக முன்னறிவிப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.












Click it and Unblock the Notifications