மாஜி மனைவியுடன் பிரச்சனை: 2 மகன்களை கொன்று பேராசிரியர் ரயில் முன்பு குதித்து தற்கொலை
ஹைதராபாத்: ஹைதராபாத் அருகே பேராசிரியர் ஒருவர் தனது முன்னாள் மனைவியுடனான பிரச்சனையில் தனது இரண்டு மைனர் மகன்களை குத்திக் கொலை செய்துவிட்டு தானும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
ஹைதராபாத் அருகே உள்ள அல்வால் பகுதியில் வசித்து வந்தவர் பேராசிரியர் குருபிரசாத். அவருக்கும் அவரது மனைவி சுகாசினிக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. அவர்களின் மைனர் மகன்களான நந்தா மற்றும் விட்டல் தாயுடன் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பிரதிவாரம் சனிக்கிழமை காலை குருபிரசாத் தனது மகன்களை அழைத்துச் சென்றுவிட்டு அன்று மாலையே தாயிடம் ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை குருபிரசாத் மகன்களை மெட்சல்லுக்கு அழைத்துச் சென்று அவர்களின் கழுத்தில் கூர்மையான பொருளால் குத்திக் கொலை செய்தார். பின்னர் உடல்களை போர்வையில் வைத்து தனக்கு சொந்தமான நிலத்தில் தோண்டி வைத்திருந்த குழியில் போட்டு புதைத்துவிட்டார். முன்னதாக அவர் குழி தோண்டியபோது எதற்கு என்று கேட்டவர்களிடம் கட்டுமானப்பணிக்காக தோண்டுவதாக தெரிவித்தார்.
மகன்களை புதைத்த பிறகு அவர் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் தனது பைக்கை நிறுத்திவிட்டு, அங்கிருந்து பேருந்து மூலம் ஜேம்ஸ் தெருவுக்கு சென்று அங்கு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது செல்போனில் மகன்களை கொலை செய்தது பற்றியும், அவர்களின் உடல்களை புதைத்த இடம் பற்றியும் எஸ்.எம்.எஸ். டைப் செய்த அவர் அதை அனுப்பாததால் டிராப்டில் இருந்தது. அதை பார்த்த போலீசார் அவர் குறிப்பிட்டிருந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது 2 உடல்கள் அழுகிக்கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடல்களை தோண்டி எடுத்த போலீசார் அவற்றை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு பேராசிரியர் தனது மகன்களை கொலை செய்து தானும் தற்கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications