ஒரு ஆளுநராக அந்த வார்த்தையை சொல்லியிருக்க கூடாது.. கடும் எதிர்ப்பால் பின் வாங்கிய காஷ்மீர் கவர்னர்
ஸ்ரீநகர்: ஒரு ஆளுநராக இந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்க கூடாது என்று, ஜம்மு காஷ்மீர் ஆளுநர், சத்யபால் சிங், இன்று விளக்கம் அளித்துள்ளார்.
ஊழல் செய்த அரசியல்வாதிகளை கொல்லுங்கள், அப்பாவி போலீஸ்காரர்களை கொல்லாதீர்கள் என்று, காஷ்மீர் ஆளுநர் சத்யபால் சிங் நேற்று நடைபெற்ற பொது நிகழ்ச்சியொன்றில் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அரசியல் தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
ஆளுநரின் கருத்துக்களுக்கு கடுமையாக பதிலடி கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ட்விட்டரில் பதிவிட்டதாவது: "இந்த ட்வீட்டை சேவ் செய்து வைத்துக்கொள்ளுங்கள். இன்று முதல் ஜம்மு காஷ்மீரில் எந்தவொரு முக்கிய அரசியல்வாதியோ அல்லது சேவை / ஓய்வுபெற்ற அதிகாரியோ கொல்லப்பட்டால் அது ஆளுநர் சத்யபால் மாலிக் அவர்களின் வெளிப்படையான உத்தரவின் பேரில் கொலை செய்யப்பட்டதாகவே அர்த்தம்" என காட்டமாக தெரிவித்திருந்தார்.
இதனால் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார் சத்யபால் மாலிக். அவர் இன்று கூறுகையில், பரவியுள்ள ஊழல் காரணமாக கோபத்துடனும் விரக்தியுடனும் பேசியதாக மாலிக் விளக்கம் தெரிவித்துள்ளார்.
"ஆளுநராக, நான் அத்தகைய கருத்தை கூறக்கூடாது, ஆனால் எனது தனிப்பட்ட உணர்வு. பல அரசியல் தலைவர்களும், அதிகாரத்தில் இருப்பவர்களும், இங்கு ஊழலில் மூழ்கியுள்ளனர்" என்று அவர் செய்தி நிறுவனமான ஏஎன்ஐக்கு இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் அரசியல் தலைவர்கள் ஊழல் செய்ததாகவும், தேர்தல்களில் வாக்களிப்பு குறைவாக இருப்பதால் வெகுஜன ஆதரவு அவர்களுக்கு இல்லை என்றும் ஆளுநர் அடிக்கடி குற்றம் சாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications