ஒரு ஆளுநராக அந்த வார்த்தையை சொல்லியிருக்க கூடாது.. கடும் எதிர்ப்பால் பின் வாங்கிய காஷ்மீர் கவர்னர்
ஸ்ரீநகர்: ஒரு ஆளுநராக இந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்க கூடாது என்று, ஜம்மு காஷ்மீர் ஆளுநர், சத்யபால் சிங், இன்று விளக்கம் அளித்துள்ளார்.
ஊழல் செய்த அரசியல்வாதிகளை கொல்லுங்கள், அப்பாவி போலீஸ்காரர்களை கொல்லாதீர்கள் என்று, காஷ்மீர் ஆளுநர் சத்யபால் சிங் நேற்று நடைபெற்ற பொது நிகழ்ச்சியொன்றில் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அரசியல் தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
ஆளுநரின் கருத்துக்களுக்கு கடுமையாக பதிலடி கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ட்விட்டரில் பதிவிட்டதாவது: "இந்த ட்வீட்டை சேவ் செய்து வைத்துக்கொள்ளுங்கள். இன்று முதல் ஜம்மு காஷ்மீரில் எந்தவொரு முக்கிய அரசியல்வாதியோ அல்லது சேவை / ஓய்வுபெற்ற அதிகாரியோ கொல்லப்பட்டால் அது ஆளுநர் சத்யபால் மாலிக் அவர்களின் வெளிப்படையான உத்தரவின் பேரில் கொலை செய்யப்பட்டதாகவே அர்த்தம்" என காட்டமாக தெரிவித்திருந்தார்.
இதனால் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார் சத்யபால் மாலிக். அவர் இன்று கூறுகையில், பரவியுள்ள ஊழல் காரணமாக கோபத்துடனும் விரக்தியுடனும் பேசியதாக மாலிக் விளக்கம் தெரிவித்துள்ளார்.
"ஆளுநராக, நான் அத்தகைய கருத்தை கூறக்கூடாது, ஆனால் எனது தனிப்பட்ட உணர்வு. பல அரசியல் தலைவர்களும், அதிகாரத்தில் இருப்பவர்களும், இங்கு ஊழலில் மூழ்கியுள்ளனர்" என்று அவர் செய்தி நிறுவனமான ஏஎன்ஐக்கு இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் அரசியல் தலைவர்கள் ஊழல் செய்ததாகவும், தேர்தல்களில் வாக்களிப்பு குறைவாக இருப்பதால் வெகுஜன ஆதரவு அவர்களுக்கு இல்லை என்றும் ஆளுநர் அடிக்கடி குற்றம் சாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications