உங்க வீட்டு கக்கூஸை கிளீன் பண்றதா என் வேலை.. சாத்வி பிரக்யா சர்ச்சை பேச்சு!
போபால்: உங்கள் கழிப்பறைகளையும் சாக்கடையையும் சுத்தம் செய்வது என் வேலை அல்ல என மத்திய பிரதேசம் மாநிலத்தின் போபால் எம்பியான பாஜகவைச் சேர்ந்த சாத்வி பிரக்யா சிங் சர்ச்சைக்குரிய கருத்தை பேசியுள்ளார்.
மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய சாத்வி பிரக்யாவை குற்றமற்றவர் என நீதிமன்றம் விடுவித்தது. இதையடுத்து அவர் பாஜக சார்பில் போபால் மக்களவை தொகுதியில் போட்டியிட அறிவிக்கப்பட்டார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் அவர் அந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் போபால் தொகுதிக்குள்பட்ட செகோர் பகுதியில் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

எம்பி
அப்போது பாஜக தொண்டர் ஒருவர் தனது தொகுதியின் சுகாதாரமின்மை குறித்து பிரக்யாவிடம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பிரக்யா, உங்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்ய நான் எம்பியாக தேர்வு செய்யப்படவில்லை.

வளர்ச்சி
அது என் வேலையும் அல்ல. அதை புரிந்து கொள்ளுங்கள். நான் எந்த பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டேனோ அதை நேர்மையாக செய்வேன். ஒரு எம்பியாக மக்களின் பிரதிநிதிகளான எம்எல்ஏ கவுன்சிலர்கள் உள்ளிட்டோருடன் இணைந்து தொகுதியின் வளர்ச்சியாக பணி செய்ய வேண்டும்.

காட்டம்
உங்களின் குறைகளை அப்பகுதியின் பிரதிநிதிகளை அழைத்து பேசிக் கொள்ளுங்கள். எனக்கு அடிக்கடி போன் செய்து புகார் செய்வதை நிறுத்திக் கொள்ளவும் என காட்டமாக கூறினார்.
|
கருத்துகள்
இதை கேட்ட பாஜக தொண்டர்களிடையே இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேச்சுக்கு பாஜக தேசிய செயல் தலைவர் ஜெ.பி நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். பிரக்யா ஏற்கெனவே தேச தந்தையான காந்தியை பிரக்யா தேச பக்தர் என தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் பிரக்யா சொன்ன கருத்துகளால் என்னால் அவரை என்றுமே மன்னிக்கவே முடியாது என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications