உ.பி. கோவில் நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல்: உளவுத்துறை எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தரபிரதேசத்தில் உள்ள கோவில் நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் நடந்த தொடர் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக அகிலேஷ் யாதவ் தலைமையிலான ஆளும் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய உளவுத்துறை உத்தரபிரதேசத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கையில், ''உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி போன்ற பிரபலமான கோவில் நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும், உத்தரபிரதேசத்தில் உள்ள முக்கிய தளங்களிலும் தாக்குதல் நடத்தப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதுகாப்பை அதிகரிக்கக்கோரி உத்தரபிரதேச அரசை, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications