எதிர்கட்சிகள் பிரிவினையை தூண்டி அச்சுறுத்துகின்றன: கேரளாவில் சோனியா குற்றச்சாட்டு
கொச்சி: ஊழலுக்கு எதிராக போராட எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை, அனைவரின் மனநிலையை குழப்பி ஆதாயம் தேடுவதே எதிர்கட்சிகளின் முக்கிய நோக்கமாக இருக்கிறது என்று கேரளாவில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய காங்கிரஸ் தலைவர் சோனியா குற்றம் சாட்டியுள்ளார்.

கேரளாவில் இன்று காங்கிரஸ் சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு தனது முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பேசியதாவது:
'வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். மதசார்பின்மை குறித்த கொள்கை இந்தியாவிற்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதை பயன்படுத்தி பா.ஜ.க. பிரிவினையை ஏற்படுத்தி வருகிறது.
உம்மன் சாண்டி கேரளாவில் அளப்பரிய பணியாற்றி வருகிறார். நாட்டின் ஒற்றுமைக்காக நாங்கள் போராடி வருகிறோம். வளமான இந்தியாவை உருவாக்குவதற்காகவே பணியாற்றி வருகிறோம். அனைவரின் மனநிலையை குழப்பி ஆதாயம் தேடுவதே எதிர்கட்சிகளின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.
எங்களின் சாதனைகளை மையமாகக் கொண்டு நாங்கள் மக்களை சந்திக்க உள்ளோம். 2014 தேர்தல் எங்களின் நோக்கம் அல்ல. மக்கள் விரும்பும் இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
ஊழலுக்கு எதிராக போராட எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. ஊழலுக்கு எதிராக பா.ஜ.க. என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? ஆனால் நாங்கள் எப்போதும் அதற்கு எதிராக போராடி வருகிறோம்.
கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புற பகுதிகளின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் அரசு கொண்டு வந்த திட்டங்களால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். தகவல் அறியும் உரிமை சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம் என ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் எத்தனையோ உள்ளன.
ஊழலுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்ற காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. அனைத்து பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் அதை தூண்டிவிட்டு வன்முறையை தூண்ட முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications