வேலைக்கு பை பை.. 2020 தேர்தல் இலக்கு.. கட்சி தொடங்கிய முன்னாள் ஐஐடி மாணவர்கள்!
டெல்லி: ஐஐடியின் முன்னாள் மாணவர்கள் 50 பேர் சேர்ந்து புதிய அரசியல் கட்சியைத் துவக்கியுள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐஐடி) இயங்கி வருகிறது. இதில் படிக்கும் மாணவர்கள் மிகவும் திறமைசாலிகளாகக் கருதப்படுகின்றனர். காரணம் அதில் படிக்க மாணவர்களுக்கு இடம் கிடைப்பது கடினம். அந்தளவிற்கு போட்டி நிறைந்தது. எனவே, அதில் பயில்பவர்கள் மிகவும் திறமைசாலிகளாகவே வெளிவருகின்றனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஐஐடிக்களில் படித்த 50 மாணவர்கள் ஒன்று சேர்ந்து, தங்களது முழுநேர வேலையை ராஜினாமா செய்து விட்டு, புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளனர். அந்தக் கட்சிக்கு பகுஜன் ஆசாத் கட்சி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய கட்சியை தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
தற்போது இந்த அமைப்பில் உள்ள ஐம்பது பேரும் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். எனவே, தங்கள் பிரிவினருக்கு மறுக்கப்படும் சலுகைகளுக்காகவும், உரிமைக்காகவும் தாங்கள் போராட இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து 2015ம் ஆண்டு பேட்சை சேர்ந்தவரும், இந்த அமைப்பின் தற்போதைய தலைவராக இருப்பவருமான நவீன்குமார் கூறுகையில், “நாங்கள் வரும் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. பீகார் மாநிலத்தில் 2020-ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும், 2024-ல் நடைபெறும் லோக்சபா தேர்தலிலும் போட்டியிட ஆயத்தமாகி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
பகுஜன் ஆசாத் கட்சியின் போஸ்டரில் அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ், அப்துல்கலாம் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போதே சமூகவலைதளங்களில் தங்கள் புதிய கட்சிக்கான பிரச்சாரத்தை உறுப்பினர்கள் ஆரம்பித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications