வேலைக்கு பை பை.. 2020 தேர்தல் இலக்கு.. கட்சி தொடங்கிய முன்னாள் ஐஐடி மாணவர்கள்!
டெல்லி: ஐஐடியின் முன்னாள் மாணவர்கள் 50 பேர் சேர்ந்து புதிய அரசியல் கட்சியைத் துவக்கியுள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐஐடி) இயங்கி வருகிறது. இதில் படிக்கும் மாணவர்கள் மிகவும் திறமைசாலிகளாகக் கருதப்படுகின்றனர். காரணம் அதில் படிக்க மாணவர்களுக்கு இடம் கிடைப்பது கடினம். அந்தளவிற்கு போட்டி நிறைந்தது. எனவே, அதில் பயில்பவர்கள் மிகவும் திறமைசாலிகளாகவே வெளிவருகின்றனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஐஐடிக்களில் படித்த 50 மாணவர்கள் ஒன்று சேர்ந்து, தங்களது முழுநேர வேலையை ராஜினாமா செய்து விட்டு, புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளனர். அந்தக் கட்சிக்கு பகுஜன் ஆசாத் கட்சி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய கட்சியை தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
தற்போது இந்த அமைப்பில் உள்ள ஐம்பது பேரும் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். எனவே, தங்கள் பிரிவினருக்கு மறுக்கப்படும் சலுகைகளுக்காகவும், உரிமைக்காகவும் தாங்கள் போராட இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து 2015ம் ஆண்டு பேட்சை சேர்ந்தவரும், இந்த அமைப்பின் தற்போதைய தலைவராக இருப்பவருமான நவீன்குமார் கூறுகையில், “நாங்கள் வரும் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. பீகார் மாநிலத்தில் 2020-ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும், 2024-ல் நடைபெறும் லோக்சபா தேர்தலிலும் போட்டியிட ஆயத்தமாகி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
பகுஜன் ஆசாத் கட்சியின் போஸ்டரில் அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ், அப்துல்கலாம் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போதே சமூகவலைதளங்களில் தங்கள் புதிய கட்சிக்கான பிரச்சாரத்தை உறுப்பினர்கள் ஆரம்பித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications