1kg பிளாஸ்டிக் கொடுத்தால் 2kg அரிசி... ஆந்திராவில் புதுமை படைத்த கலெக்டர்
அமராவதி: ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் ஒரு கிலோ பிளாஸ்டிக்கை கொடுத்துவிட்டு இரண்டு கிலோ அரிசி வாங்கிச் செல்லலாம் என்ற புதுமை திட்டத்தை செயல்படுத்தியுள்ளார் அம்மாவட்ட ஆட்சியர் சத்தியநாராயணன் ஐ.ஏ.ஏஸ்.
பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக அனந்தபூரை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மாவட்ட ஆட்சியர் சத்தியநாராயணனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
அனந்தபூர் மாவட்டத்திற்குட்பட்ட குண்டக்கல்லில் இதற்கான தொடக்க விழா நடைபெற்றது.

விழிப்புணர்வு
பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், அது மக்கள் மத்தியில் முழுமையாக சென்று சேரவில்லை என்று தான் கூற வேண்டும். இன்றும், பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்ந்த வண்ணம் தான் உள்ளது.

ஒத்துழைப்பு இல்லை
அரசும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்காக எத்தனையோ வழிகளில் விளம்பரம் செய்து விட்டது. ஆனாலும், அதனை முழுமையாக கட்டுப்படுத்தமுடியவில்லை. காரணம் பிளாஸ்டிக்கை ஒழிக்க அரசுக்கு மக்கள் போதிய ஒத்துழைப்பு நல்குவதில்லை.

பாராட்டு
இந்நிலையில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்ட ஆட்சியர் சத்யநாராயணன், தனது நிர்வாகத்திற்குட்பட்ட பகுதியில் பிளாஸ்டிக்கை ஒழிக்க புதுமை திட்டம் ஒன்றை செயல்படுத்தியுள்ளார். இதற்காக அவருக்கு சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பல தரப்பினரும் பாராட்ட்டு தெரிவித்து வருகின்றனர்.

2 கிலோ அரிசி
ஒரு கிலோ பிளாஸ்டிக்கை வழங்கினால் 2 கிலோ அரிசியை வழங்கும் திட்டம் அனந்தபூர் மாவட்டம் குண்டக்கல்லில் தொடங்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

புதிய முயற்சி
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தனது நடவடிக்கைகளிலும், செயல்பாடுகளிலும் புதுமையை கடை பிடித்து வருவது அனைவரும் அறிந்தது. அந்த வகையில் அவரது பாணியிலேயே மாவட்ட ஆட்சியர் சத்யநாராயணனும் இந்த புதிய முயற்சியை தொடங்கியுள்ளார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications