இனிமேல் யெஸ் சாருக்கு பதில் ஜெய்ஹிந்த் சொல்லுங்க.. குஜராத்தில் பள்ளிகளுக்கு புதிய உத்தரவு
அகமதாபாத்:குஜராத்தில் மாணவர்கள் வருகையைப் பதிவு செய்யும் போது, யெஸ் சார் என்று கூறுவதற்கு பதிலாக ஜெய் ஹிந்த் என கூறுமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக பள்ளிகளில் மாணவர்களின் வருகையை பதிவு செய்யும்போது, ஆசிரியர்கள் மாணவர்களின் பெயர்களை சொல்லி அழைப்பர். அப்போது, அவர்கள் தங்களது வருகையை உறுதி செய்ய உள்ளேன் ஐயா என்று பதில் கூறுவது வழக்கம்.

ஆனால் அதை மாற்றி ஜெய்ஹிந்த் அல்லது ஜெய்பாரத் என்று இனிமேல் கூறவேண்டும் என்று குஜராத் பள்ளிகளுக்கு மாநில அரசு கட்டாய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவானது ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது.
குஜராத்தில் கல்வி அமைச்சகம் நடத்திய ஆய்வு கூட்டத்தின் முடிவில் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்க முடிவானது. இதனை தொடர்ந்து குஜராத் முதன்மை கல்வி இயக்ககம் மற்றும் குஜராத் மேனிலைப்பள்ளி கல்வி வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதன்படி, ஒன்று முதல் 12 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் ஜனவரி 1 ம் தேதி முதல் ஜெய்ஹிந்த் அல்லது ஜெய்பாரத் என்றே சொல்ல வேண்டும். இந்த உத்தரவை அனைத்துப் பள்ளிகளும் பின்பற்றுவதை உறுதிப்படுத்துமாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications