ஜம்முவில் இன்று தியாகிகள் நினைவு தினம்.. முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்ட அமர்நாத் யாத்திரை
ஜம்மு: ஜூலை 13-ம் தேதியான இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருவதால், அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1-ம் தேதி முதல் 2019-ம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை துவங்கியது. 46 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரையில் பங்கேற்க 1.75 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

கடந்த 12 நாட்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் வரை அமர்நாத் பனிலிங்க தரிசனத்தை முடித்துள்ளனர். இந்நிலையில் யாத்திரை துவங்கி 12 நாட்கள் முடிந்துள்ள நிலையில், இன்று யாத்திரையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுவது தான். கடந்த 1931-ம் ஆண்டு இதே ஜூலை 13-ம் தேதி காஷ்மீரை ஆட்சி செய்த டோக்ரா ஆட்சியாளர்களுக்கு எதிராக குரல் கொடுத்த, அப்துல் காதீர் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் அரசு படையினர்.
இதனை கண்டித்ததும் அவரை விடுதலை செய்ய கோரியும், அப்துல் காதீர் அடைக்கப்பட்ட சிறைக்கு வெளியே ஏராளமான மக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். இதனையடுத்து ஆத்திரமடைந்த அரசு படையினர், துப்பாக்கி தோட்டாக்களால் மக்களை துளைத்தெடுத்தனர். இதில் சுமார் 22 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.
இந்த கொடூர சம்பவத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 13-ம் தேதி காஷ்மீரில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுவது வழக்கம். இதனையொட்டி ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தியாகிகள் தினத்தையொட்டி காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க, ஜம்முவில் இருந்து செல்லும் அமர்நாத் யாத்திரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நிலைமை சீராக உள்ளதாக தகவல் வந்த பிறகு, உயரதிகாரிகள் உத்தரவிட்ட பின்னர் மீண்டும் அமர்நாத் யாத்திரை துவங்கும் என கூறப்பட்டுள்ளது. யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், ஜம்முவின் பகவதி நகரில் முகாமிட்டுள்ள யாத்ரீகர்கள் யாரும் தங்களது பயணத்தை தொடரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications