உத்தரபிரதேசத்தில் ரயிலில் சென்ற இஸ்லாமிய குடும்பம் மீது கொலைவெறித் தாக்குதல்!
உத்தரப்பிரதேசத்தில் ரயிலில் சென்றுகொண்டிருந்த இஸ்லாமியக் குடும்பத்தினர் மீது கும்பல் ஒன்று கொலை வெறித்தாக்குதல் நடத்தியதால், அவர்கள் படுகாயமடைந்தனர்.
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ரயிலில் சென்றுகொண்டிருந்த இஸ்லாமியக் குடும்பத்தை கும்பல் ஒன்று தாக்கியுள்ளது. மேலும் பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளது.
உத்தரப்பிரதேசம், காஸ்கஞ்ச் பயணிகள் ரயில் மோடா என்னும் ஊருக்கு அருகில் செல்லும் போது, இஸ்லாமியக் குடும்பத்தை ஒரு கும்பல் குறிவைத்துத் தாக்கியுள்ளது. அக்குடும்பத்தில் இருந்த பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளது.

அந்தக் குடும்பத்தினர் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, ஊர் திரும்பும் போது இந்தக் கொடூரத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. ரயிலில் இருக்கும் அவசர கால கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்த கும்பல், அந்தக் குடும்பத்தினரை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளது.
மேலும், அதில் 17 வயது மாற்றுத்திறனாளி இளைஞர் இருந்துள்ளார். அவரையும் கூட அந்த கும்பல் விட்டு வைக்காமல் சரமாரியாகத் தாக்கியுள்ளது. அதில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் படுகாயம் அடைந்தனர்.
ரயில் பருக்காபாத் ரயில் நிலையத்தை அடைந்ததும் ரயில்வே அதிகாரிகள் அவர்களை மீட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் இஸ்லாமியர் என்பதாலேயே தாக்குதலுக்கு ஆளானதாக அக்க்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூறினர்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications