இந்தியா சீனா எல்லை...ஸ்ரீநகர் லே நெடுஞ்சாலை...பொது போக்குவரத்துக்கு மூடல்!!
ஸ்ரீநகர்: கிழக்கு லடாக் பகுதியில் மீண்டும் சீனா ஊடுருவ முயற்சித்து இந்திய ராணுவப் படையினரால் விரட்டப்பட்டு இருக்கும் நிலையில், ஸ்ரீநகர் லே பகுதியில் பொது வாகனங்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. ராணுவத்தினர் மற்றும் அவர்களது வாகனங்களுக்கு மட்டும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video
இந்திய, சீன எல்லையில் எப்போதும் சீனாவின் கண்களை உறுத்திக் கொண்டு இருக்கும் பகுதி கிழக்கு லடாக். இங்கு சீனா ஊடுருவினால், எளிதாக இந்திய எல்லைக்குள் காலை வைக்கலாம் என்பது கணக்கு. இருநாடுகளுக்கும் இடைப்பட்ட பாதுக்காக்கப்பட்ட இந்த இடத்தில் ரோந்து மட்டுமே வர வேண்டும் என்ற ஒப்பந்தம் இருக்கும் நிலையில் சீனா அடிக்கடி மீறி வருவது பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.

கிழக்கு லடாக் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 29-30 ஆகிய தேதிகளில் சீனா இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாங்காங் டிசோ பகுதிக்குள் நுழைய முயற்சித்தது. இதை இந்திய ராணுவம் உடனடியாக தடுத்து நிறுத்தியது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோடு பாங்காங் டிசோ வழியில் 135 கிலோ மீட்டர் தொலைவிற்கு செல்கிறது. இதில் 45 கி. மீட்டர் தொலைவு இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு பிங்கர் 4 எனப்படும் இடத்தில் சீனா ஊடுருவ முயற்சித்துள்ளது. இங்கு இந்திய ராணுவத்தினர் நடந்து சென்று ரோந்துப் பணிகளை மேற்கொள்கின்றனர். ஆனால், சீன ராணுவம் இந்தப் பகுதியில் ராணுவத் தளவாடங்கள் கொண்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது.
பாங்காங் டிசோ பகுதியில் இருக்கும் இந்தியப் பகுதியை ஆக்ரமிக்க சீன ராணுவம் முயற்சித்து வருவதாக இந்திய ராணுவம் இன்று வெளியிட்டு இருக்கும் தகவலில் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''இந்திய சீன எல்லைப் பகுதியில் முன்பு ஊடுருவ முயற்சித்த இடத்தில் மீண்டும் ஊடுருவுவதற்கு சீன ராணுவம் முயற்சித்தது. இதுகுறித்து கடந்த முறை இருநாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின்போது ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இருந்தும் இதுவரை இருந்த நிலையை மீறுவதற்கு சீனா முயற்சிக்கிறது. இந்த இடத்தில் சீன ராணுவத்தினர் குறிப்பிடத்தக்க அளவில் ரோந்து சென்று கொண்டு இருந்தனர். இந்தப் பகுதியில் உடனடியாக கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன' என்று தெரிவித்துள்ளது.

மேலும் இந்த இடத்தில் ஏற்பட்டு இருக்கும் புதிய சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சுசுல் என்ற இடத்தில் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்திய ராணுவம் பேச்சுவார்த்தையின் மூலம் அமைதியை பேணுவதில் உறுதியாக உள்ளது, அதேசமயம், பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications