அமெரிக்காவுக்கு '911' போன்று இந்தியாவுக்கு '112': விரைவில் அறிமுகம்
டெல்லி: அவசர நேரத்தில் உதவி கோருபவர்கள் எப்படி அமெரிக்காவில் 911 என்ற எண் இருக்கிறதோ அதே போன்று இந்தியாவில் 112 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கடந்த வாரம் ராஜஸ்தானில் நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினியின் பென்ஸ் காரும், ஆல்டோ காரும் மோதியது. இதில் ஆல்டோ காரில் இருந்த 4 வயது சிறுமி பலியானார். விபத்து நடந்த உடன் உள்ளூர் டாக்டர் ஹேமமாலினியை மட்டும் தனது காரில் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அவர்கள் சிறுமியை தங்களுடன் அழைத்துச் செல்லவில்லை.
உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாததால் தான் சிறுமி பலியானார். விபத்துகள் ஏற்படும்போது அவசர உதவிக்கு மாநிலத்திற்கு ஒரு எண் இருப்பதால் மக்கள் குழம்பிவிடுகிறார்கள். இந்நிலையில் தான் தேசிய அளவில் அவசரகால உதவிக்கு என்று 112 என்ற ஒரே ஏண்ணை அறிமுகப்படுத்த உள்ளது அரசு.
இந்தியாவில் ஆண்டுதோறும் 2 லட்சத்து 31 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் பலியாகின்றனர். அதில் பலர் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாததால் பலியாகின்றனர். அவசர காலத்தில் உதவுவது பற்றி உள்துறை அமைச்சகம் 5 ஆண்டு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
இது குறித்து தொலைத்தொடர்புத் துறை அதிகாரி சஞ்சய் பன்சால் கூறுகையில்,
இந்தியாவின் புதிய அவசர ஹாட்லைன் எண்ணான 112-ல் காவல்துறை(100), தீயணைப்புத்துறை(102), ஆம்புலன்ஸ்(103) மற்றும் அவசர பேரிடர் மேலாண்மை(108) ஆகியவற்றின் எண்களும் சேர்க்கப்படும். போகப் போக அனைத்து அவசர உதவி எண்களும் 112 உடன் ஒருங்கிணைக்கப்படும் என்றார்.
5 ஆண்டு காலத்தில் 112 எண் மூலம் தினமும் 10 லட்சம் கால்கள் எடுக்கப்படும். இந்த திட்டத்தில் 13 மொழிகள் சேர்க்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications