காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.
லடாக் கிழக்கு எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கில் சீனா அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலில் 43 சீனா வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் எல்லையில் மிகப் பெரிய அளவிலான போர்ச் சூழல் நிலவி வருகிறது.
இதனிடையே காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த ஜூன் மாதம் மட்டும் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்திருந்தனர்.
இந்த நிலையில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே நவ்ஷெரா பகுதியில் இன்று பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய தாக்குதலில் ராணுவ வீரர் ஹவில்தார் தீபக் கார்கி வீர மரணம் அடைந்தார். இந்த ஜூன் மாதம் மட்டும் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications