ஐ.எஸ். தீவிரவாதத்தால் ஒருபோதும் இந்தியாவில் காலுன்ற முடியாது: ராஜ்நாத் சிங் உறுதி
டெல்லி: ஐ.எஸ். தீவிரவாதத்தால் ஒரு போதும் இந்தியாவில் காலூன்ற முடியாது. அதற்கு தடுப்பாக இந்தியாவின் குடும்ப பாரம்பரியம் செயல்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "இந்தியாவின் குடும்ப பாரம்பரியம் தான் ஐ.எஸ். தீவிரவாதத்திற்கு ஒரு தடுப்பாக செயல்படுகிறது" என்றார்.

மேலும், " என்னால் உறுதியாக கூறமுடியும், ஐ.எஸ். தீவிரவாதத்தால் இந்தியாவில் ஒருபோது காலுன்ற முடியாது. இதற்கு நம்முடைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தான் காரணம்.
நாட்டின் உள்துறை அமைச்சராக சொல்கிறேன் இந்திய முஸ்லிம்கள் ஒருபோதும் தங்கள் குழந்தைகள் ஐ.எஸ். தீவிரவாதத்தால் பாதிக்கப்படுவதை அல்லது கவரப்படுவதை அனுமதிக்க மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications