இந்தியாவில் இலங்கை அமைச்சர் – 15 காரைக்கால் மீனவர்களுக்கு விடுதலை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இலங்கை அமைச்சர் மங்களா சமரவீரா இந்தியா வருவதனையொட்டி நல்லிணக்க முறையில் 15 காரைக்கால் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் அதிபர் சிறிசேனா தலைமையில் புதிய அமைச்சரவை அமைந்ததை தொடர்ந்து அங்குள்ள சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Indian fishermen freed, Sri Lankan foreign minister heads for Delhi

இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்களா சமரவீரா இன்று இந்தியா வருகிறார். டெல்லியில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து இலங்கை சிறையில் இருந்த காரைக்காலை சேர்ந்த 15 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் விரைவில் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த 15 பேர் விடுதலையை தொடர்ந்து இலங்கை சிறையில் தமிழகம், புதுச்சேரி உள்பட இந்திய மீனவர்கள் யாரும் இல்லை என்று வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+