நம்ம ஊர் லைசன்ஸ் வெளிநாடுகளிலும் இனி செல்லும்.. மத்திய அரசு அறிவிப்பு.. எங்கு தெரியுமா?
குறிப்பிட்ட வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள், இந்தியாவில் வாங்கி இருக்கும் லைசன்ஸை அங்கே பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
Recommended Video
டெல்லி: குறிப்பிட்ட வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள், இந்தியாவில் வாங்கி இருக்கும் லைசன்ஸை அங்கே பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
உலகம் முழுக்க இந்தியர்கள் நிரம்பி இருக்கிறார்கள். முக்கியமாக சில வெளிநாடுகளுக்கு கார் உள்ளிட்ட வாகனம் ஓட்டவே பல மக்கள் வெளிநாடு செல்கிறார்கள்.
இதுபோல் வெளிநாடுகளில் கார் ஓட்டி பணியாற்ற நிறைய விதிமுறைகள் இருக்கிறது. சில வெளிநாடுகளில் லைசன்ஸ் பெறுவது மிகவும் கடினமான விஷயம் ஆகும். ஆனால் குறிப்பிட்ட வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள், இந்தியாவில் வாங்கி இருக்கும் லைசன்ஸை அங்கே பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
[ 2 வருடங்களுக்கு பின் காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல்.. இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு! ]
என்ன
இதற்காக மத்திய அரசு பட்டியல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே ஆகிய நாடுகளில் இனி இந்திய லைசன்ஸ்களே செல்லுபடியாகும். அங்கு சுற்றுலா செல்லும் மக்கள் இந்திய லைசன்ஸை பயன்படுத்தலாம்.
அமெரிக்காவில் எப்படி
அமெரிக்காவில் ஒரு வருடம் வரை இப்படி இந்திய லைசன்ஸை பயன்படுத்த முடியும். அதன்பின் அந்நாட்டு லைசன்ஸை வாங்க வேண்டும். ஆஸ்திரேலியாவிலும் அதேபோல் பயன்படுத்தலாம். இதில் புதிதாக இணைந்த நாடு ஆஸ்திரேலியா ஆகும். ஜெர்மனியில் 6 மாதம் வரை இந்திய லைசன்ஸை பயன்படுத்தலாம்.
ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்
இந்த இந்திய லைசன்ஸ் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அந்த குறிப்பிட்ட நாட்டிற்கு எப்போது வந்தோம் என்ற ஆவணமும் இருக்க வேண்டும். ஆங்கில லைசன்ஸ் இல்லாத பட்சத்தில் அதற்கான கையெழுத்து பெட்ரா மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும்.
என்ன காரணம்
வெளிநாடுகளுக்கு இந்தியர்கள்தான் அதிகம் செல்கிறார்கள். மேலும் இந்திய பயணிகளை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பெரிய அளவில் சுற்றுலா துறை முன்னேறும் என்று அந்த நாடுகள் நம்புகிறது.