டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட்: இந்திராணிக்கு சிறையில் விஷம் அளிக்கப்பட்டதா?
மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திராணி முகர்ஜிக்கு சிறையில் யாரும் விஷம் அளித்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா, முன்னாள் கார் டிரைவர் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மும்பையில் பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திராணியின் உடல்நலம் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் மோசமானது.
இதையடுத்து அவர் மும்பையில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மன அழுத்தத்திற்கான மாத்திரையை அளவுக்கு அதிகமாக எடுத்து தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அவரின் ரத்தம் மற்றும் சிறுநீரை பரிசோதனை செய்ததில் அதில் எந்த மருந்தும் அளவுக்கு அதிகமாக இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில்,

மருந்துகள்
இந்திராணி சிறையில் தனக்கு அளிக்கப்பட்ட மாத்திரைகளை சேர்த்து வைத்து ஒரே நேரத்தில் அவற்றை விழுங்கியிருக்கலாம் என்று கூறப்பட்டது. அவர் தற்கொலை செய்ய சிறை அதிகாரிகள் யாரும் உதவியிருக்க மாட்டார்கள்.

சஸ்பெண்ட்
இந்திராணி தற்கொலை செய்ய சிறை அதிகாரி யாராவது உதவி செய்தது தெரிய வந்தால் அவரை சஸ்பெண்ட் செய்ய தயங்க மாட்டோம்.

விஷம்
இந்திராணிக்கு யாராவது விஷம் கொடுத்தார்களா என்று விசாரணை நடந்து வருகிறது. சிறையில் இந்திராணியை தொடர்பு கொள்ளும் அனைவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.

மருத்துவர்
சிறையில் மருத்துவர் ஒருவர் உள்ளார். அவர் கைதிகளுக்கு மருந்துகளை அளிக்கையில் அவற்றை அங்கேயே அவர் கண்முன்பு உட்கொள்ள வைப்பார். அதனால் இந்திராணி மாத்திரைகளை சேகரித்து வைத்து மொத்தமாக உட்கொள்ள வாய்ப்பே இல்லை என்றார் அந்த அதிகாரி.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications