சாப்பாடு நல்லா இல்லை: மனைவியைக் கொன்ற படுபாவி கணவன்
போபால்: மத்திய பிரதேசத்தில் இரவு உணவை சுவையாக சமைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் கணவன் மனைவியை கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் உள்ளது மான்பூர் நகர். அந்த நகரைச் சேர்ந்தவர் ராம் சிங் மகன் தினேஷ்(33). அவரது மனைவி லலிதா(30). தினேஷ் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு சாப்பிட்டுள்ளார். உணவு சுவையாகவே இல்லை என்று கூறி அவர் லலிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஆத்திரம் அடைந்த தினேஷ் பயிரை அறுக்க உதவும் கூரான ஆயுதத்தால் மனைவியை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த லலிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் தினேஷை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் தினேஷ் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.