இது வேற லெவல் பிளான்.. லிஸ்ட்லயே இல்லையே.. பிளைட் ஏறும் ஸ்டாலின்.. அடித்து தூக்கும் திமுக?
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நிறைவு பெற இருக்கும் பாரத் ஜோடோ யாத்திரையின் இறுதி நாளில் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தேசிய அளவில் ஹிட் அடித்துள்ளது. எதிர்பார்த்ததை விட மக்கள் இந்த யாத்திரைக்கு அதிக வரவேற்பு கொடுத்துள்ளனர்.
தேசிய அரசியலிலும் இந்த யாத்திரை மிகப்பெரிய அளவில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக காங்கிரஸ் கட்சியை அடிமட்டத்தில் இருந்து மீண்டும் மீட்க இந்த யாத்திரை உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ்
காங்கிரஸ் நிர்வாகிகள் மட்டுமின்றி காங்கிரஸ் சாராத பல அறிவுஜீவிகள், இடதுசாரிகள், எழுத்தாளர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். நாடு முழுக்க இந்த யாத்திரை எதிர்பார்த்ததை விட அதிகம் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் இதில் மற்ற எதிர்க்கட்சிகள் பெரிதாக அங்கும் கலந்து கொள்ளவில்லை. கன்னியாகுமரியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்ததை தவிர மற்ற மாநிலங்களில் பெரிதாக வேறு எதிர்க்கட்சிகள் இந்த யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை . 3750 கிலோமீட்டருக்கு இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. 150 நாட்கள் காங்கிரஸ் சார்பாக இந்த யாத்திரை நடப்படும் நிலையில், இன்னும் 17 நாட்கள் மட்டுமே மிச்சம் உள்ளது.

சாதனை
தினமும் 20- 30 கிலோ மீட்டர் தூரம் ராகுல் காந்தி இந்த நடைப்பயணத்தில் பயணம் மேற்கொண்டார். குறிப்பிட்ட சில நாட்கள் ஓய்வை தவிர மற்ற நாட்கள் எல்லாம் ராகுல் காந்தி தீவிரமாக நடந்தார். இந்த பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தி தொடங்கினார். அதன்பின் கேரளா சென்றவர், கேரளாவில் பெரும்பாலான நகரங்களை கவர் செய்தார். கேரளா முடிவில் வயநாடு சென்றுவிட்டு பின்னர் கூடலூர் வழியாக கர்நாடகா சென்றார். பின்னர் அங்கிருந்து ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி கடந்து தற்போது ராகுல் காந்தி சென்று கொண்டு இருக்கிறார்.

அழைப்பு
இந்த யாத்திரை ஜனவரி 30ம் தேதி ஜம்மு காஷ்மீரில் நிறைவு பெறுகிறது. ஸ்ரீநகரில் ராகுல் காந்தி தேசிய கொடியை ஏற்ற உள்ளார். நிறைவு நாள் விழா பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் தலைவர்கள் பலரும் நிறைவு விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். அதே சமயம் காங்கிரஸ் சார்பாக 21 அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. மதசார்பற்ற கட்சிகள், இடதுசாரிகள், திராவிட கட்சிகள், தென் மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. இவர்களை பேரணிக்கு வரும்படியும், கடைசி நாளில் பேரணியில் கலந்துகொள்ளும்படியும் காங்கிரஸ் தலைவர் கார்கே சார்பாக அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

ஸ்டாலின்
இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் ஜம்மு காஷ்மீர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேரணியை தொடங்கி வைத்ததே ஸ்டாலின்தான். இந்த நிலையில் நிறைவு விழாவிலும் ஸ்டாலின் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தேசிய அளவில் கவனிக்கப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலினும் தேசிய அளவில் கவனம் பெற்று வருகிறார். மோடியை தீவிரமாக எதிர்க்கும் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். இந்த நிலையில் நிறைவு விழாவில் கலந்து கொள்ளும் பிளானும் ஸ்டாலினிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

தேசிய அரசியல்
தேசிய அரசியலில் முக்கியமான தலைவராக ஸ்டாலின் கவனம் பெற்று வரும் நிலையில்தான் அவரின் இந்த பயணம் தொடர்பாக வெளியாகும் தகவல்கள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. ஆனால் இந்த பயணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தேசிய அளவில் 20 க்கும் அதிகமான கட்சிகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியுடன் லோக்சபா 2024 தேர்தலில் கூட்டணியை தொடர வேண்டும் என்ற திட்டத்தில் திமுக உள்ளது. இதன் மூலம் அதிமுக + காங்கிரஸ் கூட்டணி உருவாவதை தடுக்க முடியும். இதற்காகவும் ஸ்டாலின் ஸ்ரீநகர் செல்ல திட்டமிடுவார் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா? -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications