இஷ்ரத் ஜஹான் வழக்கு - மோடி அமைச்சரிடம் சிபிஐ திடீர் விசாரணை

இவர் தவிர மேலும் ஒரு அமைச்சர் உள்பட 3 பேருக்கு விசாரணைக்கு வருமாறு சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த 2வது அமைச்சர் பெயர் பூபிந்தர் சிங் செளடாஸ்மா. இவர் கல்வி அமைச்சர் ஆவார்.
2001ல் நடந்த ஒரு கூட்டத்தின் ஆடியோ பேச்சு தொடர்பாக இவரிடம் விசாரணை நடத்தபப்டவுள்ளது. இந்த ஆடியோ பேச்சுக்களில் இடம் பெற்றுள்ள குரல்கள் இந்த இரு அமைச்சர்களுடையது என்று சிபிஐ நம்புகிறதாம்.
அந்தக் கூட்டத்தில் இஷ்ரத் ஜஹான் கொலை தொடர்பாக இவர்கள் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டம் கமல் திரிவேதியின் அலுவலகத்தில் வைத்து நடந்துள்ளது. இப்போது கமல் திரிவேதி அட்வகேட் ஜெனரலாக இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பிரபுல் படேலும் இருந்ததாகவும் தெரிகிறது. திரிவேதிக்கும் சம்மன் போயுள்ளது.
2004ம் ஆண்டு அகமதாபாத் புறநகர்ப் பகுதியில் இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு பேர் குஜராத் குற்றப் பிரிவு போலீஸ் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது போலி என்கவுண்டர் என்று பின்னர் தெரிய வந்தது. ஆனால் முதல்வர் நரேந்திரமோடியைக் கொல்ல வந்தவர்கள் இவர்கள், நால்வரும் தீவிரவாதிகள் என்பது குஜராத் அரசின் வாதமாகும்.












Click it and Unblock the Notifications