நிலவின் பின்பக்கத்தில் அணு சக்தி.. ரோவர் அனுப்பி ஆராய்ச்சி செய்யும் இஸ்ரோ.. மாஸ் திட்டம்!
நிலவின் பின்பக்கத்தில் உள்ள பொருட்களை ஆராய்ச்சி செய்ய இந்தியா ரோவர் ஒன்றை அனுப்ப உள்ளது.
Recommended Video

டெல்லி: நிலவின் பின்பக்கத்தில் உள்ள பொருட்களை ஆராய்ச்சி செய்ய இந்தியா ரோவர் ஒன்றை அனுப்ப உள்ளது. இதன் மூலம் இஸ்ரோ, புதிய முறையில் மின்சாரம் தயாரிக்கவும் முடிவெடுத்துள்ளது.
சூரிய ஒளியை பிரதிபலிக்க முடியாத காரணத்தால் நிலவின் பின்பக்கம் முழுக்க முழுக்க இருளாக இருக்கும். இந்த இருளான பகுதியில் என்ன இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதற்காக இந்தியா களத்தில் இறங்கியுள்ளது.
இதன் பின்பக்கத்தில் மிகவும் அதிக அளவில் மின்சார சக்தி அளிக்கும் பொருட்கள் உள்ளது. இப்போது இஸ்ரோ, ஸ்பேஸ் எக்ஸ், நாசா என எல்லோரும் நிலவின் இந்த பகுதியைதான் ஆராய்ச்சி செய்ய இருக்கிறார்கள்.

இரண்டு நாடுகள்
சீனா நிலவின் பின் பக்கத்தை ஆராய்ச்சி செய்ய முடிவு செய்துள்ளது. இதுவரை நிலவின் முன்பக்கத்தை மட்டுமே நாம் ஆராய்ச்சி செய்துள்ளோம். ஆனால் சீனாவின் அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே இந்தியாவும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நிலவின் பின்பக்கத்திற்கு 2020ல் இந்தியா ரோவர் ஒன்றை அனுப்ப இருக்கிறது. இது நிலவின் பின்பக்கத்தை ஆராயும்.

ஏன் இந்த ஆராய்ச்சி
நிலவின் பின்பக்கத்தில் பூமியில் அரிதாக கிடைக்கும் ஹீலியம் 3 அதிகமாக கிடைக்கிறது. இதன் மூலம் கொஞ்சம் கூட மாசு இல்லாத அணு மின்சாரத்தை தயாரிக்க முடியும். இதனால் உலகில் 250 வருடங்களுக்கு செலவே இல்லாமல், எல்லா இடங்களுக்கும் மின்சாரம் வழங்க முடியும். இந்த மின்சார சக்தியை யார் எடுப்பது என்பதுதான் நிலவின் பின்பகுதியை ஆராய மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.

முதல் நாடு
இதற்கு அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளும் முயற்சி செய்கிறது. ஆனால், இதில் இந்தியாதான் தெளிவான முடிவிற்கு வந்துள்ளது. இதன் மூலம், நிலவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கும். அதேபோல் மற்ற நாடுகளுக்கு தலைமை ஏற்கவும் முடியும். இது இந்தியாவை சர்வதேச அளவில் பெரிய வல்லரசாக மாற்றும்.

எப்போது நடக்கும்
2020ல் இந்தியா இந்த ரோவரை அனுப்ப திட்டமிட்டுள்ளது. சீனா 2022ல் தான் இந்த ஆராய்ச்சியை செய்ய இருக்கிறது. இதனால் இந்தியாவின், இந்த ஆராய்ச்சி மற்ற நாடுகளை வாய் பிளக்க வைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இதற்காக 2020க்கு பின் நிலவிற்கு மனிதர்கள் அனுப்பப்படவும் வாய்ப்புள்ளது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
27 ஆண்டுகளுக்கு பிறகு.. இன்று ப்ளூ மைக்ரோ மூன்! மிஸ் பண்ணாதீங்க மக்களே! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications