சீறிப் பாய்ந்த ‘பாகுபலி’ ராக்கெட்.. வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ!
ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம் - 3 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது சிம்எஸ்எஸ் - 3 செயற்கைக்கோள். இந்த செயற்கைக்கோள் 4,410 கிலோ எடை கொண்டது. இதுவரை புவிவட்ட சுற்றுப் பாதையில் ஏவப்பட்டதில் அதிகபட்ச எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் இதுதான். இது பாகுபலி என செல்லமாக அழைக்கப்படுகிறது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பல்வேறு தகவல்தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அந்த வரிசையில், ஜிசாட் -7 ஆர் என்று அழைக்கப்படும் 4,410 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ் 03 என்ற கடற்படைக்கு தேவையான தகவல்தொடர்பு செயற்கைக்கோள் இன்று மாலை 5.26 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இந்திய மண்ணில் இதுவரை ஏவப்பட்டதில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவகு ஏவுதளத்தில் இருந்து இன்று ஏவப்பட்டுள்ளது. இதற்காக LVM3-M5 ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஏவப்படும் CMS-03 செயற்கைக்கோளானது 4,410 கிலோ எடை கொண்டது. இவ்வளவு எடையை கொண்டதால் இதனை "பாகுபலி" என்று வர்ணிக்கின்றனர்.
முன்னதாக பிரான்ஸ் நாட்டின் கயானாவில் இருந்து கடந்த 2018 ஆம் ஆண்டு அரியானே 5 என்ற ராக்கெட் மூலம் ஜிசாட்-11 என்ற பிரம்மாண்ட செயற்கைக்கோள் இஸ்ரோ மூலம் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோளின் எடை 5,854 கிலோ. அதன்பிறகு தற்போது இந்திய மண்ணில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் ஏவப்படுகிறது. இன்று ஏவப்பட்டுள்ள பாகுபலி ராக்கெட்டின் நீளம் 43.5 மீட்டர்.
ராக்கெட் ஏவுவதற்கான் 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று தொடங்கிய நிலையில், இன்று மாலை 5.26 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. LVM3-M5 ராக்கெட்டை பொறுத்தவரை மூன்று படிநிலைகளை கொண்டது. S200 என்ற இரண்டு சாலிட் மோட்டார் ஸ்ட்ராப்-ஆன்ஸ், L110 என்ற திரவ புரோபல்லண்ட் கோர் ஸ்டெஜ், C25 என்ற கிரையோஜெனிக் ஸ்டேஜ் ஆகியவை ஆகும்.
இவை மூன்றும் சேர்ந்து அதிக எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை ஏவ உதவிகரமாக இருக்கின்றன. அதிக சக்தி வாய்ந்த கிரையோஜெனிக் ஸ்டேஜ் மூலம் GTOவில் 4,000 கிலோ எடையையும், புவியின் தாழ் வட்டப் பாதையில் 8,000 கிலோ எடையையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த ராக்கெட்டானது GSLV MkIII என்ற வகையை சேர்ந்தது.
அதாவது, செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவுதல், நிலையான சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்துவது போன்ற விஷயங்களை கச்சிதமாக செய்யக்கூடியது. இந்த ராக்கெட் முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பங்கள் மூலம் தயாரிக்கப்பட்டது. முதன்முதலில் 2014ஆம் ஆண்டு டிசம்பரில் LVM-3 ஆபரேஷனல் ஃபிளைட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அதிலிருந்து தொடர்ந்து செயற்கைக்கோள் ஏவுதல் வெற்றிகரமாகவே அமைந்துள்ள நிலையில், இன்றைய தினம் 5வது மிஷன் ஏவப்பட்டுள்ளது.
ஏவுகணையில் இருந்து CMS-03 வெற்றிகரமாக பிரிந்தது. மிஷன் வெற்றி அடைந்துளது. "ஹைகம்யூனிகேஷன் செயற்கைக்கோள் CMS-03 பிரிந்துள்ளது, இது வெற்றிகரமான ஏவுதலைக் குறிக்கிறது. செயற்கைக்கோள் அதன் நோக்கம் கொண்ட சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டுள்ளது" என்று SSLV ஏவுதள வளாகத்தின் துணை திட்ட இயக்குநர் பி. மாதுரி கூறியுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications