ஜம்மு காஷ்மீரில் திடீர் வெள்ளம்.. 65 பேர் பலி! காணாமல் போன 50 பேரை தேடும் பணிகள் தீவிரம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் கிஸ்ட்வார் மாவட்டத்தில் சசோட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் திடீரென வெள்ளம் ஏற்பட்டிருந்தது. இதில் சிக்கி 65 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
சசோட்டி என்பது, மச்சைல் மாதா கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள கடைசி கிராமமாகும். இந்த பகுதியில் கடந்த வியாழன் கிழமை மதியம் 12.25 மணிக்கு திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமானோர் சிக்கினர்.

வெள்ளத்தில் சிக்கயவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடந்த நிலையில், 2 மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 46 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களின் உறவினர்கள் 69 பேர் காணாமல் போயிருந்தனர். மச்செய்ல் மாதா கோயிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் புனித பயணத்தை மேற்கொள்வார்கள். இந்த பயணத்தின்போதுதான் மேக வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது.
கிஸ்ட்வார் நகரிலிருந்து சுமார் 90 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிசோட்டியில் இருந்து 9,500 அடி உயரத்தில் உள்ள கோயிலுக்கு 8.5 கி.மீ. பயணம் தொடங்குகிறது. மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் தற்போது இந்த புனித பயணம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. வெள்ளம் தொடர்பான வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. அதில், வீடுகள் அடித்துச் செல்லப்படுவது தெரிகிறது.
உத்தர்காஷியின் தாராலி கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒன்பது நாட்களுக்குப் பிறகு மீண்டும் இமயமலையில் இப்படி ஒரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பது சோகத்தை உருவாக்கியிருக்கிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்திய வானிலை மையத்தின் ஆய்வின்படி, 2010 முதல் 2022 வரை ஜம்மு காஷ்மீரில் 2,863 தீவிர வானிலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இதில் 552 இறப்புகள் நிகழ்ந்துள்ளன. IMD விஞ்ஞானிகளான முக்தார் அகமது, சோனம் லோட்டஸ், ஃபாரூக் அஹ்மத் பட், அமீர் ஹசன் கிச்லூ, மற்றும் சிவிந்தர் சிங், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தைச் சேர்ந்த பப்பா தாஸ் ஆகியோரால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த 12 ஆண்டு காலத்தில், இடி மின்னல் மற்றும் கனமழை அடிக்கடி நிகழ்ந்துள்ளன. 1,942 முறை இடி மின்னல் ஏற்பட்டது. 64.5-115.5 மிமீ மழை 24 மணி நேரத்தில் பெய்த 409 சம்பவங்களும், திடீர் வெள்ளம் 168 முறையும், நிலச்சரிவு 186 முறையும் நிகழ்ந்துள்ளன. 24 மணி நேரத்தில் 30 செ.மீ.க்கு மேல் பனிப்பொழிவு ஏற்பட்ட 42 சம்பவங்கள், 182 பேரின் உயிரை பறித்து, அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
திடீர் வெள்ளம், கனமழை, நிலச்சரிவு ஆகியவற்றால் முறையே 119, 111, 71 பேர் உயிரிழந்துள்ளனர். கிஸ்ட்வார், அனந்தநாக், கந்தர்பால் மற்றும் டோடா ஆகிய பகுதிகளில் திடீர் வெள்ளத்தால் அதிக இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்த யூனியன் பிரதேசத்தில் கனமழை மற்றும் கனத்த பனிப்பொழிவு முக்கிய பேரழிவுகளாக இருந்தபோதிலும், திடீர் வெள்ளம், இடி மின்னல் மற்றும் புயல் போன்ற நிகழ்வுகளின் தாக்கமும் அதிகரித்து வருவதாக ஆய்வு குறிப்பிடுகிறது.
ஜம்மு காஷ்மீரில் தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு பல காரணங்கள் இருந்தாலும், உயரும் வெப்பநிலை, மேற்கு திசை காற்று மாற்றங்கள் மற்றும் பிராந்தியத்தின் புவியியல் அமைப்பு ஆகிய மூன்றும் முக்கிய காரணங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications