காஷ்மீரில் கடும் துப்பாக்கி சண்டை.. 2 தீவிரவாதிகள் தப்பி ஓட்டம்
காஷ்மீர் குல்காம் பகுதியில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் தப்பி ஓட்டம்.
காஷ்மீர்: காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் இருவர் தப்பி ஓடிவிட்டனர். இவர்களைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் நேற்று இரவு தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். பதிலுக்கு இந்திய ராணுவத்தினரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இன்று காலை வரை நீடித்த இந்தத் துப்பாக்கிச் சண்டையை தாக்குப்பிடிக்க முடியாமல் இரண்டு தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர்.

தப்பி ஓடிய தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், இதுதொடர்பாக தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற இந்தத் தாக்குதலில் அப்பகுதியைச் சேர்ந்த அப்பாவி ஒருவரும் பலியாகியுள்ளார்.
தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதால் அம்மாநிலம் முழுவதற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களில் இரண்டாவது முறையாக தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரத்தில் நான்கு தீவிரவாதிகள் நாக்ரோடாவில் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 2 அதிகாரிகளும் 5 ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications