ஆமீர் கானை கணவர் கிண்டல் செய்ததால் தற்கொலை செய்து கொண்ட பெண்
ஜபல்பூர்: மத்திய பிரதேசத்தில் சகிப்பின்மை பற்றி நடிகர் ஆமீர் கான் பேசியதை கணவர் கிண்டல் செய்ததால் பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள உகாரி பகுதியைச் சேர்ந்தவர் சோனம் பாண்டே. அவரது கணவர் மாயங்க். நாட்டில் சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருவது பற்றி பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தெரிவித்தது பற்றி நாளிதழில் வந்த செய்தியை சோனமும், அவரது கணவரும் புதன்கிழமை பார்த்துள்ளனர்.

செய்தியை வாசித்த மாயங்க் ஆமீர் கானை கிண்டல் செய்துள்ளார். மனைவியின் பேச்சைக் கேட்டு வெளிநாட்டில் செட்டில் ஆக நினைக்கும் ஆமீர் எல்லாம் என்ன ஆம்பள என்று மாயங்க் தெரிவித்தது சோனத்தை கோபம் அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்ட சோனம் விஷம் குடித்தார். சிறிது நேரத்தில் மாயங்க் அந்த அறைக் கதவை உடைத்து உள்ளே சென்றபோது சோனம் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார்.
உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் சோனம் சிகிச்சை பலனின்றி பலியாகினார்.
இந்த சம்பவம் குறித்து கோட்வாலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications