ஆந்திராவுக்கு 3 தலைநகரங்களை உருவாக்குகிறார் ஜெகன் மோகன் ரெட்டி- சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு!
அமராவதி: ஆந்திரா மாநிலத்துக்கு 3 தலைநகரங்களை உருவாக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலம் உதயமான நிலையில் அமராவதி என்ற புதிய தலைநகரை உருவாக்கினார் அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு. ஆனால் சட்டசபை தேர்தலில் வென்று முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டி, அமராவதி தலைநகர் உருவாக்கத்தில் விருப்பம்ம் காட்டவில்லை.

ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட போது மத்திய அரசு வெளியிட்ட புதிய வரைபடத்தில் ஆந்திராவுக்கு தலைநகர் இல்லாமல் இருந்தது சர்ச்சையானது. தற்போது ஆந்திராவுக்கு 3 தலைநகரங்களை உருவாக்க உள்ளதாக ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
ஆந்திரா சட்டசபையில் இது தொடர்பாக இன்று அறிக்கை ஒன்றை ஜெகன் மோகன் ரெட்டி தாக்கல் செய்தார். அதில், சட்டசபைக்கான தலைநகரம், நிர்வாக தலைநகரம், நீதித்துறை தலைநகரம் ஆகிய 3 தலைநகரங்கள் உருவாக்கப்படும் என்றார். மேலும் அமராவதி சட்டசபை செயல்படும் தலைநகராகவும் நிர்வாக நிறைவேற்று தலைநகராக விசாகப்படினம் இருக்கும் என்றும் ஜெகன் கூறியுள்ளார்.
நீதித்துறையின் தலைநகராக கர்நூல் பரிசீலிக்கப்படுவதாகவும் இப்படி பிரிப்பதன் மூலம் அனைத்து பிராந்தியங்களும் வளர்ச்சி அடையும் என்றும் ஜெகன் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் இதற்கு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ஒரு மாநிலத்துக்கு 3 தலைநகரங்கள் என்பது எப்படி சாத்தியமாகும்? ஜெகன் மோகன் ரெட்டி விசாகப்பட்டினத்தில் இருப்பரா? அமராவதியில் இருப்பாரா? கர்நூலில் இருப்பாரா? ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் மக்கள் ஓட வேண்டுமா? பைத்தியக்காரரிடம் கல்லை கொடுத்த கதையாக ஜெகன் மோகன் ரெட்டியிடம் அதிகாரம் கிடைத்திருக்கிறது என விமர்சித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications