இளைஞர்கள் கொடுத்த நம்பிக்கை..ஜம்மு காஷ்மீரின் தலைவிதியே மாறப் போகுது.. தேர்தல் ஆணையம் முக்கிய தகவல்
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டத்தை ரத்து செய்தது உள்ளிட்ட பல பிரச்னைகளால் அங்கு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்நிலையில், இன்று ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஜம்மு காஷ்மீரின் தலைவிதியை அங்குள்ள மக்கள் மாற்ற விரும்புவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் 90 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படவுள்ளது. முதல்கட்ட தேர்தல் ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் செப்டம்பர் 25ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் அக்டோபர் 1 ம் தேதியும் நடைபெறவுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். அக்டோபர் 4ம் தேதி தேர்தல் முடிவு வெளியாக உள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் பிடிபி என அழைக்கப்படும் மக்கள் ஜனநாயக கட்சி, முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் (பரூக் அப்துல்லா மகன்) தேசிய மாநாட்டு கட்சிகள் பிரதானமாக உள்ளன. இந்த 2 கட்சிகளும் தான் மாறி மாறி இங்கு ஆட்சியைப் பிடித்து வருகின்றன. அதேபோல் பாஜகவும், காங்கிரஸ் கட்சிகளும் ஜம்மு காஷ்மீரில் போட்டியிட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின்(பரூக் அப்துல்லா மகன்) தேசிய மாநாட்டு கட்சி, பாஜக, காங்கிரஸ் இடையே நான்குமுனைப் போட்டி நிலவவுள்ளது. கடந்த 2014 ம் ஆண்டுக்குப் பிறகு 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜம்மு காஷ்மீருக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அங்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளில் 74 தொகுதிகள் பொது தொகுதிகளாகும். 9 தொகுதிகள் எஸ்டி பிரிவினருக்கான தனித் தொகுதியாகவும், 7 தொகுதி எஸ்சி பிரிவினருக்கான தனித்தொகுதியாகவும் உள்ளது. இம்மாநிலத்தில் மொத்தம் 87.09 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், 44.46 லட்சம் பேர் ஆண்கள். 42.62 லட்சம் பேர் பெண் வாக்காளர்கள். ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையே அதிகம் உள்ளது. இதில், 18 வயது முதல் 19 வயது நிரம்பிய முதல் வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது 3.71 லட்சமாக உள்ளது.
மேலும், இளம் வாக்காளர்களின் (20 முதல் 29 வயது) எண்ணிக்கை என்பது 20.7 லட்சமாக உள்ளது. மொத்தம் 9,169 இடங்களில் 11,800 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில், நகரங்களில் 2,332 வாக்குச்சாவடி மையங்களும், கிராமங்களில் 9,506 வாக்குச்சாவடி மையங்களும் அமைய உள்ளது. வாக்குச்சாவடிக்கான சராசரி வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது 735 ஆக உள்ளது. மேலும் அமைதியாக தேர்தலை நடத்த தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
ஏற்கனவே தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு கடந்த வாரம் ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டு தேர்தலுக்கான தயாரிப்புகளை ஆய்வு செய்தது. இதுகுறித்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்கள் தலைவிதியை மாற்ற விரும்புகின்றனர். வாக்காளர்கள் அதிக அளவில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் என்றார்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் தீவிரமாக இருந்த நிலையில், அங்கிருந்த இளைஞர்களும் பாதை மாறி அந்த அமைப்புகளுடன் சேரும் நிலை ஏற்பட்டது. சமீபகாலமாக இதனைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்கு முன்னர் 2019 இல் நடக்கவிருந்த தேர்தல் நடைபெறவில்லை. இதைத்தொடர்ந்து, 2024 இல் மக்களவைத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்குப் பின்னர் சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதால் இளைஞர்களின் பங்களிப்பு அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications