ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் LIVE: ஜம்மு காஷ்மீரில் முதற்கட்ட தேர்தல் நிறைவு
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் 24 தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் இன்று 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற்று வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் தேர்தல் தொடர்பான லைவ் அப்டேட்களை இங்கே காணலாம்.

10 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெறுகிறது. தற்போது முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மத்திய அரசுக்கு எதிரான உணர்வுகள் காஷ்மீரில் வலிமையாக இருக்கிறது. மக்கள் கோபமாக உள்ளனர். மாநிலத்தை 2 ஆகப் பிரித்ததை ஜம்மு காஷ்மீர் மக்கள் ஏற்கவில்லை- சிபிஐ மூத்த தலைவர் டி.ராஜா
ஜம்மு காஷ்மீர் சகோதர சகோதரிகளே, இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு அம்மாநிலத்தில் நடைபெறுகிறது. நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக, ஒரு மாநிலத்தின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது - இது உங்கள் அனைவரின் அரசியலமைப்பு உரிமைகளை மீறும் செயல். இது ஜம்மு காஷ்மீரை அவமதிக்கும் செயலாகும்.
உங்களின் ஒவ்வொரு வாக்கும் இந்தியாவிற்காக செல்லவேண்டும்
- உங்கள் உரிமைகளை மீட்டெடுக்கும்; வேலை வாய்ப்புகளைக் கொண்டு வரும்
- இது பெண்களை வலிமையாக்கும்; 'அநீதி யுகத்திலிருந்து' உங்களை வெளியே கொண்டு வரும்.… ஜம்மு காஷ்மீரை மீண்டும் செழிப்பாக மாற்றும். இன்று, அதிக எண்ணிக்கையில் உங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து, உங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துங்கள் - இந்தியாவுக்கு வாக்களியுங்கள்-
- லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 2 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாவட்டத்தின் 245 வாக்குச் சாவடிகளிலும் அமைதியாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. புல்வாமாவில் அதிக அளவில் வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கிறோம். பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளன- பிடி நித்யா, புல்வாமா காவல்துறை அதிகாரி
அனைத்து தரப்பு மக்களிடம் இருந்து தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஆதரவு இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆகையால் காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி நிச்சயம் வெற்றி பெறும் வாய்ப்பிருக்கிறது. 10 ஆண்டுகள் இதற்குதான் காத்திருக்கிறோம். களத் தகவல்கள் எங்களுக்கு சாதகமாக இருக்கிறது- ஒமர் அப்துல்லா, தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவர், பாரமுல்லா வேட்பாளர்
ஜம்மு காஷ்மீர் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக உள்ளனர். காஷ்மீரில் பிரசாரம் செய்த மோடி அப்துல்லாக்கள், காந்திகள், முப்திகள் குடும்பங்களுக்கு எதிராக பேசினார். அப்போதே தமது தோல்வியை மோடி ஒப்புக் கொண்டார். ஜம்மு காஷ்மீரில் பாஜக படுதோல்வியை சந்திக்கும்- மூத்த காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட்
ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைக்கும். ஜம்மு காஷ்மீர் மக்கள் அமைதியை விரும்புகின்றனர். நிச்சயமாக பாஜகதான் வெல்லும். காஷ்மீரில் பயங்கரவாதம்தான் மிகப் பெரிய பிரச்சனை. பயங்கரவாதத்தை ஒடுக்கி வருகிறது பாஜக. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தோல்வியைத்தான் தழுவும்- பாஜக வேட்பாளர் க்ஷ்வர் சகுன் பரிஹார்
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அனைவரும் தவறாது வாக்களித்து ஜனநாயகத்தின் திருவிழாவை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்- பிரதமர் நரேந்திர மோடி
ஜம்மு காஷ்மீர் 24 தொகுதிகளிலும் காலை 7 மணி முதலே விறு விறு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Polling underway for 24 Assembly constituencies across Jammu & Kashmir (16 in Kashmir and 8 in Jammu).
— ANI (@ANI) September 18, 2024
Visuals from a polling centre in Kishtwar pic.twitter.com/HUomrVUIun
முதல் கட்ட தேர்தலில் சிபிஎம் கட்சியின் யூசுப் தரிகாமி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் குலாம் அகமது மீர், தேசிய மாநாட்டுக் கட்சியின் ஷகினா இடூ, மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்தாஜ் மட்னி, அப்துல் ரெஹ்மான் வீரி, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி ஆகியோர் விஐபி வேட்பாளர்கள்.
ஜம்மு காஷ்மீர் முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 219 பேர் வேட்பாளர்கள். இவர்களில் 90 பேர் சுயேட்சை வேட்பாளர்கள். முதல் கட்ட தேர்தலில் வாக்காளிக்கும் வாக்காளர்கள் 23,27,580. இவர்களில் ஆண் வாக்காளர்கள் 11,76,462 , பெண் வாக்காளர்கள் 11,51,058. 24 தொகுதிகளிலும் 3,276 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 14,000 பேர் முதல் கட்ட தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்த போது 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலமும் 2 ஆக பிரிக்கப்பட்டது. இதன் பின்னர் நடைபெறும் முதல் சட்டசபை தேர்தல் இது.
இந்த கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ஜம்மு-காஷ்மீர் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 5 தொகுதிகளில் உடன்பாடு எட்டப்படாததால், காங்கிரசும், தேசிய மாநாடும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. அதாவது, கூட்டணி கட்சிகளே ஒன்றையொன்று எதிர்த்து போட்டியிடுகின்றன.
READ MORE
More From
-
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான் -
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக் -
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு! -
காங்கிரஸில் இணைந்த 6 நாளில் பென்னாகரத்தில் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன் போட்டி! தந்தையை எதிர்க்கிறாரா? -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
ஊருக்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை பாஜக நிர்வாகி முரளீதரன்! நயினார் எடுத்த ஆக்ஷன்! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின்












Click it and Unblock the Notifications