370-ரத்து செல்லும் தீர்ப்பு-இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்த மகாராஜா ஹரிசிங் மகன் கரண்சிங் கருத்து என்ன?
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய இந்திய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜம்மு காஷ்மீர் மக்களில் ஒரு பகுதியினருக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை என ஜம்மு காஷ்மீர் மகாராஜா ஹரிசிங் மகனும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஜனாதிபதியுமான மூத்த காங்கிரஸ் தலைவர் கரண் சிங் தெரிவித்துள்ளார்.
1947-ம் ஆண்டு நாடு விடுதலை அடைந்த ஜம்மு காஷ்மீர் சுதந்திரமான பகுதியாக மகாராஜா ஹரிசிங் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. ஆனால் பாகிஸ்தான் போர் தொடுத்து நெருக்கடி கொடுத்தது. ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியையும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டது. இதனால் ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ள மகாராஜா ஹரிசிங் ஒப்புக் கொண்டார். அப்போதுதான் ஜம்மு அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

இந்த 370-வது பிரிவை 2019-ல் மத்திய அரசு ரத்து செய்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவுடன் இணைந்துவிட்ட ஒருங்கிணைந்த பகுதி; சிறப்பு அந்தஸ்து வழங்கக் கூடிய 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது செல்லும் என இன்று தீர்ப்பளித்தது.
அத்துடன் ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலத்தை 2 ஆகப் பிரித்து லடாக் யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டது சரியானதுதான்; தற்போதைய ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு விரைவில் மாநில அந்தஸ்து தர வேண்டும்; ஜம்மு காஷ்மீருக்கு 2024-ம் ஆண்டு செப்டம்பருக்குள் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு குறித்து காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த மகாராஜா ஹரிசிங் மகனும் 1952-ம் ஆண்டு முதல் 1965-ம் ஆண்டு வரை 370-வது பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் ஜனாதிபதியாக இருந்தவரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான கரண் சிங் கூறியதாவது: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜம்மு காஷ்மீர் மக்களில் ஒரு பகுதியினருக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. இருந்தபோதும் அனைவரும் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ஏற்றுத்தான் ஆகவேண்டும். அதனை தவிர்த்துவிட முடியாது. தேவையில்லாமல் தலையை சுவற்றில் முட்டிக் கொண்டிருக்கவும் வேண்டாம். அடுத்த தேர்தலுக்கு தயாராவோம்.. அதை நோக்கி பயணிப்போம். இவ்வாறு கரண் சிங் கூறினார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications