ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாக். அத்துமீறல்... இந்தியா தக்க பதிலடி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு & காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால், இந்திய படைகள் தக்க பதிலடி கொடுத்தன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளன.

இதற்கு இந்திய ராணுவப்படைகளும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் எல்லையில் எப்போதும் பதற்றம் காணப்படுகிறது.
இந்நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் ஜம்மு-காஷ்மீரின் ஷாப்பூர், கெர்னி எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதுல் நடத்தியது. சிறிய ரக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் ராணுத்தினருக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள். இதன் காரணமாக ஷாப்பூர், கெர்னி எல்லை பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications