முடிவுக்கு வந்தது ஜெயலலிதா ஜாமீன் வழக்கு.. முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு..
டெல்லி : உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான ஜாமீன் வழக்கை இன்று முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தண்டனை வழங்கியதையடுத்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்தனர்.

சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 17 ஆம் தேதிக்கு பிறகு 4 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை முடிக்கப்படாமல் நிலுவையில் இருந்தன. தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமிதவ ராய் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை முடித்துவைப்பதாக உத்தரவு பிறப்பித்தது.












Click it and Unblock the Notifications