ஜெயலலிதா 4 ஆண்டு ஜெயில்… நோ பெயில்: அக்டோபர் 5 வரை ஹைகோர்ட் லீவ்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக ஜாமீன் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறைக்கு செல்லும் ஜெயலலிதா தரப்பினர் பெங்களூர் உயர்நீதிமன்றத்தில்தான் ஜாமீன் கேட்டு மேல்முறையீடு செய்யமுடியும். அக்டோபர் 5வரை தசரா விடுமுறை என்பதால் அதன்பின்னர்தான் ஜாமீன்மனு விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனையுடன், 100 கோடி அபராதமும், சசிகலா, சுதாகரன், இளவரசி, ஆகியோருக்கு 4 ஆண்டுகள் தண்டனையுடன் 4 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Jayalalithaa, others sentenced to four years in jail – no bail

நான்கு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஜெயலலிதாவின் முதல்வர் பதவியும், எம்.எல்.ஏ பதவியும் பறிபோனது. அவரால் உடனடியாக ஜாமீன் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில்தான் ஜாமீன் மனு அப்பீல் செய்யமுடியும். ஆனால் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வரும் 29ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5ஆம் தேதி வரை தசரா விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அக்டோபர் 5ஆம் தேதிக்கு மேல்தான் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டிலும் அவசர வழக்குகளை விசாரிக்கும் வசதியில்லை என்பதால் ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை விசாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே ஜாமீன் கிடைக்கும் வரை அவர் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+