எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள்: சிங்களர் குரலில் பேசும் சு.சுவாமி!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கின்றனர்.. இந்த பிரச்சனைக்கு தீர்வாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்திக்க வேண்டும் என்கிறார் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி.

தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை கைது செய்வதும் பின்னர் விடுவிப்பது அல்லது சிறையில் அடைப்பது என்பது தொடர் கதையாகிவருகிறது. ஒவ்வொரு முறை இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் போதும் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதுகிறார்.

Jayalalithaa should meet Rajapaksa: Subramanian Swamy

இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளதாவது:

தமிழக முதல்வர் ஜெயலலிதா யாழ்ப்பாணத்துக்கு செல்ல வேண்டும். அங்குள்ள தமிழர்கள் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். அவர்களது மீன் வளத்தை தமிழக மீனவர்கள் வேட்டையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் மன்னார் வளைகுடாவில் சர்வதேச எல்லையை தாண்டி மீன் பிடிக்கின்றனர். இதற்கு தீர்வாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்தித்துப் பேச வேண்டும்.

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+